Chennai Phase 2 Metro: சென்னைக்கு 2ம் கட்ட மெட்ரோ திட்ட கட்டுமான பணிக்காக, ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 


சில தினங்களுக்கு முன்பு , டெல்லி சென்ற தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, மெட்ரோ திட்டம்  உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பான கோரிக்கைகளை வைத்தார் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் , தற்போது, மத்திய அரசு நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


இரண்டாம் கட்டத் திட்டம் பின்வரும் மூன்று வழித்தடங்களை கொண்டுள்ளது:


 


1.மாதவரத்திலிருந்து சிப்காட் வரை 50 நிலையங்களுடன் 45.8 கிமீ நீளம்


 


2.கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை 30 நிலையங்களுடன் 26.1 கிமீ நீளம்


 


3, மாதவரத்திலிருந்து சோழிங்கநல்லூர் வரை 48 நிலையங்களுடன் 47 கிமீ நீளம்


 






முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி:


இந்நிலையில் பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டலின் நன்றி தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது “ உங்களுடனான எனது கடைசி சந்திப்பின் போது எங்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால், இத்திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது “ என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.