தனியார் மருத்துவ கல்லூரி நர்சிங் மாணவி

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவ்யா ( வயது 21 ) இவர், சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சிங் படித்து வந்தார். பவ்யாவின் மொபைல் போன் எண்ணிற்கு நேற்று முன்தினம் முதல் பெற்றோர் பலமுறை தொடர்பு கொண்டும் இணைப்பை ஏற்கவில்லை. சந்தேகமடைந்த அவரது பெற்றோர், சென்னை காவல் துறையின் உதவியை நாடினர்.

Continues below advertisement

போலீசார் மொபைல் போன் டவரை ஆய்வு செய்ததில் பெரியமேடு, குமாரப்பா தெருவில் உள்ள எஸ்.ஆர்.எம் சென்ட்ரல் தங்கும் விடுதியை காண்பித்துள்ளது. அங்கு சென்ற போலீசார், விடுதி வரவேற்பு அறையில் உள்ள பதிவேட்டை ஆய்வு செய்தனர். இதில், சென்னை, ராமாபுரத்தைச் சேர்ந்த பாரதி பெருமாள், 21 என்பவருடன் பவ்யா அறை எண் 109 - ல் தங்கியிருப்பது தெரிய வந்தது.

கொலை செய்யப்பட்ட நிலையில் இருந்த பெண்

அறைக்கு சென்ற போலீசார் கதவை வெகுநேரம் தட்டியும் திறக்கப்படவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, பவ்யாவை கழுத்து மற்றும் வலது கை மணிக்கட்டில் கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார்.

Continues below advertisement

பாரதி பெருமாள் துாக்கிட்டு தற்கொலை செய்ததும் தெரிய வந்தது. இருவரது உடலையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இருவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து பெரியமேடு போலீசார் தெரிவித்ததாவது ;

பவ்யா நர்சிங் படிக்கும் போது பாரதி பெருமாளை காதலித்து வந்துள்ளார். அவர் வேறு ஒரு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால், காதலுக்கு பவ்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

பெற்றோரின் வற்புறுத்தலால், நான்கு மாதத்திற்கு முன் பவ்யா வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார். இருப்பினும் மொபைல் போனில் இருவரும் பேசி வந்துள்ளனர். பவ்யாவை மறக்க முடியாத பாரதி பெருமாள், அவரை விடுதிக்கு வரவழைத்து, திருமணமானாலும் பரவாயில்லை என்னுடன் வந்துவிடு என வற்புறுத்தி உள்ளார். அவர் மறுக்கவே, பவ்யாவை கொலை செய்து, பாரதி பெருமாள் தற்கொலை செய்துள்ளார் என இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்