முதலமைச்சர் வருகை - வாகனங்கள் தடுத்து நிறுத்தம்
சென்னை ராணி மேரி கல்லூரியில் கட்டப்பட்டுள்ள புதிய கல்லூரி விடுதியை திறந்து வைத்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு தலைமைச் செயலகம் செல்லும் முதலமைச்சரின் கான்வாய் வாகனத்திற்கு வழி ஏற்படுத்துவதற்காக நீண்ட நேரத்திற்கு முன்பே பட்டினப்பாக்கம் சாந்தோம் - ல் இருந்து மெரினா கடற்கரை காமராஜர் சாலை வழியாக பாரிமுனை செல்லும் அனைத்து பேருந்துகளும் டிஜிபி அலுவலக சிக்னல் சந்திப்பில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி வைத்திருந்தனர்.
முதலமைச்சரின் கான்வாய் வாகனம் ராணி மேரி கல்லூரியில் இருந்து புறப்பட தாமதமானதால் நீண்ட நேரம் டிஜிபி அலுவலக சிக்னல் சந்திப்பில் பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், கார்கள் என அனைத்தும் காக்க வைக்கப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் ஆனதால் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய பெண்களும் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய குழந்தைகளும், பெண்களும், முதியவர்களும் பேருந்திலேயே பொறுமையாக காத்திருந்து உள்ளனர்.
நாங்கள் தானே ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தோம்
நீண்ட நேரம் ஆனதால் பேருந்தில் இருந்து கீழே இறங்கி வந்த பெண்கள், முதலமைச்சர் நாங்கள் ஓட்டு போட்டு தான் தேர்ந்தெடுத்தும். நாங்கள் சென்ற பிறகு முதலமைச்சர் சென்றால் என்ன என்று கேள்வி எழுப்பிய அவர்கள் சாலையில் போராட்டம் நடத்த முயற்சித்து நெருங்கி வந்தனர். ஆனால் அவர்களை உடனடியாக பேருந்தில் ஏறி விட வேண்டும் என காவல் துறையினர் அழுத்தம் கொடுத்ததன் காரணமாகவும், அதே போல் பொதுமக்களும் பயணிகளும் கேட்பதால் உடனடியாக பேருந்து இயக்கி விடக் கூடாது என்பதற்காக ஒரு காவலர் ஓட்டுநரிடம் சென்று பேருந்து இயக்காதீர்கள் என கூறுவதும் என டிஜிபி அலுவலக சிக்னல் சந்திப்பில் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அடையார் பகுதியில் உள்ள சிவாஜி மணி மண்டபத்தில் அவருடைய பிறந்தநாள் அன்று முதலமைச்சராக உள்ள மு.க ஸ்டாலின் மரியாதை செலுத்துவதற்காக சென்ற போது சுமார் 25 நிமிடங்கள் முழுவதுமாக அவருடைய கான்வாய் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டதால் நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வர முடியாமல் போக்குவரத்தில் சிக்கி தவித்தனர். அதன் பிறகு சென்னை உயர்நீதிமன்றம் ஏன் முதலமைச்சர் வாகனங்களுடன் இத்தனை வாகனங்கள் செல்கிறது என கேள்வி எழுப்பி பொது மக்களுக்கு சிரமப்படுத்த கூடாது என கண்டனம் தெரிவித்திருந்தது.
அதன் பிறகு , 12 வாகனம் முதலமைச்சருடன் வந்த நிலையில் அதனை 6 வாகனமாக குறைப்பதாக டிஜிபி உள்துறைச் செயலாளர் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்திய பிறகு முதலமைச்சரின் கான்வாய் வாகனத்தின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றம், முதலமைச்சரின் கான்வாய் வாகனத்தின் எண்ணிக்கையை குறைத்து பொதுமக்கள் பயணம் செய்யும் சாலையிலேயே பொதுமக்களோடு பொதுமக்களாக முதலமைச்சரின் கான்வாய் வாகனம் செல்வது பாராட்டு கூறியது என பாராட்டும் தெரிவித்தது. அதன் பிறகு உயர்நீதி மன்றத்தின் உத்தரவுகளை கருத்துக்களை மதிக்காமல் மீண்டும் முதலமைச்சர்வின் கான்வாய் வாகனம் செல்வதற்காக பொதுமக்களை சாலையில் பேருந்து பயணிகளை பேருந்துகளில் காக்க வைப்பதன் காரணமாக பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து போராட்டம் நடத்த சாலைக்கு வந்திருப்பது மீண்டும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.