சென்னையில் இன்று மாநகர பேருந்துகள் வழக்கம்போல் செயல்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.  கன மழையால் சென்னையில் நேற்று பல இடங்களில் பேருந்துகளின் சேவை பாதிக்கப்பட்ட நிலையில்,  இன்று அனைத்து தடங்களிலும் மாநகர பேருந்துகள் குறித்த நேரத்திற்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாநகர பேருந்து இயக்கம் நேற்று குறைக்கப்பட்ட நிலையில், அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்லும் மக்கள் நேற்று சிரமப்பட்டனர். இந்நிலையில், இன்று முழுமையாக பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.