சென்னையில் கொடூரம்... 2 குழந்தைகளின் உயிரை பறித்த எலி மருந்து.. காற்றில் பறந்த நெடியால் நேர்ந்த சோகம்

சென்னை குன்றத்தூரில் எலி மருந்தால் ஏற்பட்ட நெடி காரணத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

Continues below advertisement

சென்னை குன்றத்தூர் அடுத்த மணஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் கிரிதரன் (34). இவர் குன்றத்தூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் வங்கியில் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.‌ இவரது மனைவி பவித்ரா. இவர்கள் இருவருக்கும் விஷாலினி(6) மற்றும் சாய் சுதர்சன் (4) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளன.

Continues below advertisement

உடல் நலக்குறைவு

கிரிதரன் வீட்டில் எலி தொல்லை இருந்துள்ளது. இதனால் அவ்வப்போது எலிகளை கொள்வதற்காக எலி மருந்து மற்றும் எலி பேஸ்ட் ஆகியவற்றை பயன்படுத்தி வந்துள்ளனர். எலியை கொள்வதற்காக வீட்டில் எலி மருந்து வைத்த நிலையில் அந்த மருந்தின் நெடி வீடு முழுவதும் பரவி உள்ளது. இதனை சுவாசித்த குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கும் சில மணி நேரங்களில் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக நான்கு பேரும் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 

சிறுவர்கள் உயிரிழப்பு

மேலும் மேல் சிகிச்சைக்காக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். சிகிச்சை பெற்று வந்த மகள் விஷாலினி, மகன் சாய் சுதர்சன் ஆகிய இருவரும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எலி மருந்து நெடிப்பரவி இரண்டு குழந்தைகள் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement