சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி

 

பிரதமர் நரேந்திர மோடி வரும் எட்டாம் தேதி சனிக்கிழமை (நாளை) பகல் ஒன்று முப்பத்தைந்து மணிக்கு, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பேகம்பேட் விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் புறப்பட்டு, பிற்பகல் 2:45 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். பிற்பகல் 2:50 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட்டு, 2:55 மணிக்கு சென்னை விமான நிலைய புதிய முனையத்திற்கு வருகிறார். 



 

புதிய விமான முனையம் திறப்பு

 

மாலை 3 மணியிலிருந்து 3:15 மணி வரை, புதிய முனையத்தின் திறப்பு விழாவை நடத்துகிறார். அதன் பின்பு மாலை 3:20 மணிக்கு காரில் புறப்பட்டு, மாலை 3:25 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார்.

 

ஹெலிகாப்டரில் பயணம்

 

சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து மாலை 3:30 மணிக்கு இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டு, மாலை 3 50 மணிக்கு, சென்னை ஐஎன்எஸ் அடையார் சென்றடைகிறார். மாலை 3:55 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு, மாலை 4 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் செல்கிறார்.

 



 

வந்தே பாரத் ரயில் துவக்கம்

 

அங்க மாலை 4 மணியிலிருந்து 4:20 மணி வரை, சென்னை கோவை இடையே அதிவிரைவு ரயில் ஆன வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதன் பின்பு மாலை 4:25 மணிக்கு சென்னை  சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காரில் புறப்பட்டு, மாலை 4:40 மணிக்கு, விவேகானந்தர் இல்லத்திற்கு வருகிறார். அங்கு மாலை 4:45 மணியிலிருந்து 5:45 மணி வரை நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதன்பின்பு விவேகானந்தர் இல்லத்தில் இருந்து காரில் புறப்படும் பிரதமர் மாலை 5:55 மணிக்கு ஐ.என். எஸ் அடையாறு வருகிறார். அங்கிருந்து மாலை 6 மணிக்கு இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் மாலை 6:20 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார்



 

பல்லாவரத்தில் பிரதமர்

 

அங்கிருந்து காரில் புறப்படும் பிரதமர் மாலை 6:30 மணிக்கு, பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் கிரவுண்டுக்கு வருகிறார். அங்கு மாலை 6:30 மணியில் இருந்து இரவு 7:30 மணி வரை, நடக்கும் விழாவில், பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், நிறைவடைந்த திட்டம் தொடங்கி வைத்தல் போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

 

சென்னையில் இருந்து மைசூர் பயணம்

 

அதன்பின்பு இரவு 7:35 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு இரவு 7:40 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். இரவு 7:45 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து, இந்திய விமானப்படை தனி விமானத்தில் பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் மைசூர் புறப்பட்டு செல்கிறார். இரவு 8:40 மணிக்கு மைசூர் விமான நிலையம் சென்றடைகிறார்

 

யானை முகாமிற்கு விசிட்

 

மறுநாள் ஒன்பதாம் தேதி ஞாயிறு காலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு பிரதமர் மோடி வருகிறார். அதன் பின்பு காலை 9:45 மணிக்கு தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் தெப்பக்காட்டில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் மோடி, காலை 10:20 மணிக்கு, கர்நாடக மாநிலம் மைசூர் யுனிவர்சிட்டி ஹெலிபேட் தளத்தில் சென்று இறங்குகிறார்.