Pet Dog License: செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் உரிமம் பெற உத்தரவு: எப்படி பெறுவது?

Chennai Pet Dog: செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் உரிமம் பெற வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Continues below advertisement

செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் உரிமம் பெற வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், எப்படி உரிமம் பெறுவது குறித்த வழிகாட்டுதல்களை சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Continues below advertisement

சிறுமியை தாக்கிய நாய்கள்:

சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் 5 வயது சிறுமியை ராட்வீலர் இன வகையைச் சார்ந்த வளர்ப்பு நாய்கள் இரண்டு, தாக்கி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்த ஒரு சம்பவம் மக்களுக்கு மிகுந்த மன வருத்தத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தையடுத்து, நாய் வளர்ப்பு குறித்தான பேச்சுக்கள் அதிகம் எழ ஆரம்பித்தன. மேலும் சில மாதங்களுக்கு முன்பு, மத்திய அரசு வெளியிட்டுள்ள அயல்நாட்டு ரக நாய் வளர்ப்புக்கான விதிமுறைகள் நினைவு கூறப்பட்டது. இதில் 23 நாய்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்திருந்ததை பார்க்க முடிந்தது. 

உரிமம் பெறுவது எப்படி?:

இந்நிலையில், சென்னையில் செல்லப்பிராணிகள் வளர்ப்போர்கள், ஆண்டுதோறும் உரிமம் பெற வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. உரிமம் பெற https://www.chennaicorporation.gov.in/ என்ற இணையத்தின் வாயிலாக விண்ணப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    1. சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் அல்லது
    2. சென்னை மாநகராட்சி குறிப்பிட்டுள்ள, இந்த புகைப்படத்தில் உள்ள க்யூ. ஆர் கோர்டை ஸ்கேன் செய்யவும்.

 

3. உங்களது பெயர் மற்றும் முகவரி, உரிமையாளர் புகைப்படம், செல்லப்பிராணி புகைப்படம் உள்ளிட்ட கேட்கப்படும் விவரங்களை உள்ளீடு செய்யவும்.

மத்திய அரசின் விதிகள்:

Continues below advertisement