சென்னையில் அதிவேகமாக வந்த ஆட்டோவை நிறுத்த முயன்ற காவலர் மீது ஆட்டோ மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் போலீஸ் அந்தரத்தில் பறந்து கீழே விழுந்தார். இந்தக் காட்சி சிசிடிவியில் பதிவானைதை தொடர்ந்து, அந்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.


சென்னை கிண்டியில் இருந்து பூந்தமல்லி செல்லக்கூடிய சாலையில் நந்தம்பாக்கம் பகுதியில் கடந்த 3ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. இரவு நேரத்தில் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி, அன்றைய தினத்தில் தலைமை காவலர்களின் காவலர்கள் வழக்கம்போல் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக ஆட்டோ ஒன்று வந்தது. அந்த ஆட்டோவை உதவி ஆய்வாளர் பொன்ராஜ் நிறுத்துமாறு கை நீட்டியுள்ளார். ஆனால், ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவை நிறுத்தாமல் காவலர் மீது மோதியுள்ளார். இதில், காவலர் அந்தரத்தில் தூக்கிவீசப்பட்டு கீழே விழுந்தார். இந்த விபத்தில் காவலர் பலத்த காயமடைந்தார். கால் உள்ளிட்ட இடங்களில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். 






 


இந்த விபத்திற்கு காரணமான நபர்களை பிடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டதை தொடர்ந்து, சம்பவம் நடந்த பகுதியில் ஒரு கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோ நம்பரை வைத்து அந்த நபர்களை தேடி வருகின்றனர்.


ஆட்டோவை நிறுத்தாமல் சென்றவர்கள் ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட சென்றிருக்கலாம் அல்லது குற்றவாளிகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால், அவர்களை விரைவில் பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுகுறித்த சிசிடிவி வீடியோ பார்ப்பவரகளை கதிகலங்க செய்கிறது. 


மேலும் படிக்க: Watch Video : வாலிபர்களுடன் வாலிபால் ஆடிய முதலமைச்சர்... சமத்துவபுரத்தில் ஒரு சம்பவம்..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண