தென் மாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்களுக்கு சென்னையில் நுழைவு வாயிலாக இருக்கும் செங்கல்பட்டில் இருந்து நாள்தோறும் இருபதிற்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை வரை சென்று வரும். சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து சென்னை நோக்கி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மின்சார ரயிலில் பயன்படுத்தி விரைவாக தங்களுடைய பணிகளுக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவார்கள்.

 

இந்நிலையில் செங்கல்பட்டு - சிங்கப்பெருமாள் கோவில் இடையே ரயில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கும் காரணத்தினால் ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதன்காரணமாக வருகின்ற சில நாட்களுக்கு ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளன அதற்கான அட்டவணையை தற்போது ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

 

ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பின் படி, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு இருக்கு இன்று முதல் வருகின்ற இருபத்தி மூன்றாம் தேதி வரையும் மற்றும் 25-ஆம் தேதிகளில் காலை 10:10 மணி, 10:56 மணிக்கும், செங்கல்பட்டில் இருந்து, கடற்கரைக்கு, காலை, 11:30 மணி, மதியம், 1:00 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், இருவழியிலும், செங்கல்பட்டு - சிங்கப்பெருமாள் கோவில் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன.



அதேபோல் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு, இன்று முதல வருகின்ற 23 மற்றும் 25 ஆம் தேதிகளில், காலை, 10:10 மணிக்கும், செங்கல்பட்டில் இருந்து, சென்னை கடற்கரைக்கு நண்பகல், 12:20 மணிக்கும் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள், இருவழியிலும், செங்கல்பட்டு - சிங்கப்பெருமாள் கோவில் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு வரும் 22ம் தேதி காலை, 10:05 மணிக்கும் செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு நண்பகல், 12:25 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரயில்கள், இருவழியிலும், செங்கல்பட்டு - சிங்கப்பெருமாள்கோவில் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரை நிலையத்துக்கு, இன்றும் நாளையும், வரும், 22, 23 மற்றும் 25ம் தேதிகளில், காலை, 10:40 மணிக்கு இயக்க வேண்டிய மின்சார ரயில் முழுதும் ரத்து செய்யப்பட்டுள்ளது சிறப்பு ரயில் , திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரை நிலையத்துக்கு இன்று, நாளையும், வரும், 22, 23 மற்றும், 25ம் தேதிகளில், பகல் 12:00 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.

 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X