கொள்கை பிடிப்பு இல்லாத செல்வப் பெருந்தகை, பாஜக பற்றி பேச அருகதை இல்லை எனவும் பேச முயற்சித்தால் அவருடைய பின்புலங்களை ஆராய வேண்டிய வரும் என்பதால் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டுமென எச். ராஜா  காஞ்சிபுரத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை குறிப்பிட்டு திமுகவினர் ஆடுகளை வெட்டிய நபர்கள் மீது, மிருக வதை சட்டத்தின் கீழ் அந்தத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பேட்டி அளித்தார்.


பாஜக தேசிய மூத்த நிர்வாகியான எச்.ராஜா காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு வருகை புரிந்தார். சங்கர மட மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அதைத் தொடர்ந்து இருபது நிமிடம் இருவரும் சந்தித்து உரையாடினார். அதனைத் தொடர்ந்து காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளார். 


பின் செய்தியாளர்களை சந்தித்த ராஜா  அதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா , பா.சிதம்பரத்திற்கு பொருளாதாரம்தான் தெரியாது என்றால், கணக்கு கூட தெரியவில்லை, பாஜக ஏற்கனவே 430 தொகுதியில் போட்டியிட்டு மீதி கூட்டணிக்கு வகுத்தது,அதில் 240 தொகுதி வெற்றி பெற்றது ஆனால் பா. சிதம்பரம் கணக்கு தெரியாமல் 99 வித்தியாசம் தெரியாமல் பேசுகிறார். இதை அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் குற்றமா என கேள்வி கேட்கவேண்டிய நிலை உருவாகிறது, வயது மூப்பு காரணமாக இதுபோன்று பேசி வருகிறார்.


"தேச துரோக பணி செய்தவர்கள்"


இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறவேண்டும் எனவும், மோடி அரசு தோல்வி பெற வேண்டும் எனவும் இஸ்ரேலில் உள்ள தனியார் அமைப்பு  மூலம் வேலை செய்ததாக விஷயங்கள் வெளியே வந்துள்ளது, இது போன்று தேச துரோக பணி செய்தவர்கள் யார் என்று கண்டறிய விசாரணை அமைக்கப்பட உள்ளது. எதிர்க்கட்சிகள் வாக்கு பிரிந்ததால் தான் திமுக வெற்றி பெற்றதை தவிர கடந்த முறை விட இந்த முறை திமுக வாக்கு வங்கி குறைந்து உள்ளது. 


மிருக வதை சட்டம்


அனைத்து மதங்களுக்கும் அனைத்து மேம்பாடும் நடைபெற்று, கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் மோடி அவர்கள் செய்து வருகிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியும் மதப் பிரிவினைவாதத்தை உண்டாக்கும் வகையில், தேர்தல் வாக்குறுதிகள் கூட சிறுபான்மையினரை குறிப்பிட்டு பெரும்பான்மையானவர்களை தள்ளியுள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை குறிப்பிட்டு திமுகவினர் ஆடுகளை வெட்டிய நபர்கள் மீது, மிருக வதை சட்டத்தின் கீழ் அந்தத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .


வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும்


பாஜக வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறி வருவது தவறானது, என்றும் பாமகவின் வாக்குகளே அதன் வாக்கு சதவீதத்துக்கு உயர்வு என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியது குறித்து கேட்டதற்கு, செல்வப்பெருந்தகை பல கட்சிகளில் பயணித்து தற்போது காங்கிரஸில் உள்ளதாகவும், பாஜக பற்றி பேச அவருக்கு அருகதை இல்லை எனவும், மீறி பேசினால் அவருடைய பல்வேறு பின்புலங்களை ஆராய வேண்டியிருக்கும் எனவும், ஆகவே வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்