பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள கோவில் வளாகத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியை காணொளியில் காணும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார்.



சிவ பெருமானின் பிரித்திவி (மண்) ஸ்தலமாக விளங்கும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் பிரதமரின் வாரணாசி நிகழ்ச்சி யை காணொளி மூலம் கட்சித் தொண்டர்களுடன் அமர்ந்து பார்வையிட்டார்.  இதனையெடுத்து செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை கூறியதாவது,

 

 

மாநில அரசு பெயரளவிற்கு மட்டுமே விவசாயத்திற்கு தனியாக பட்ஜெட் போட்டிருக்கிறார்கள். மோடி ஆட்சியில் கடந்த 7 ஆண்டுகளில் உரத்திற்கு தட்டுப்பாடு என்பது எதுவும் ஏற்படவில்லை, எனவே மாநில அரசு மத்திய அரசு மீது புகார் அளிப்பதை தவிர்த்து மாநில அரசு விவசாயிகளுக்காக என்ன செய்திருக்கிறது, உரத்திற்காக மானியம் வழங்கி இருக்கிறார்களா, என்பதை சிந்திக்க வேண்டும்.



மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும் கவர்ச்சிகரமாக பட்ஜெட்டை மட்டும் போட்டுவிட்டு மத்திய அரசு எல்லாம் செய்து விடும் என எதிர்பார்க்கிறார்கள். பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் விஷயத்தில் இந்து அறநிலைத்துறை நாடகமாடுகிறது, யாரெல்லாம் கடவுளை நம்பி ஆன்மிகத்தை நம்பி கோவிலில் சாமி தரிசனம் செய்ய விரும்புகின்றார்களோ, அவர்களுக்கு நமது நம்பிக்கையில் நிச்சயமாக இடம் இருக்கிறது. அதை தடுத்து நிறுத்துவதற்கு யாருக்கும் அருகதை கிடையாது.

சிபிஎஸ்இ தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி குறித்து கேட்டதற்கு, இந்தியாவில் இரண்டு பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் ஒன்று காங்கிரஸ்காரர்கள், மற்றொன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  வேலை இல்லாதவர்கள் சொல்வதை சீரியசாக எடுத்துக் கொள்ளக் கூடாது .



பாரபட்சம் இல்லாமல் திமுக உறுப்பினர்கள் யாரெல்லாம் தவறு செய்து இருக்கிறார்களோ அவர்கள் மீது நாளை எப்ஐஆர் பதிவு செய்தால் டிஜிபி முதல் ஆளாய் வரவேற்பது பாரதிய ஜனதா கட்சிதான். இந்து அறநிலை துறை அமைச்சர் கட்சி மாறி இன்னொரு கட்சிக்கு வந்து வெள்ளை கலர் சட்டை அணிந்து நெற்றியில் பட்டை அடித்துக் கொண்டால் அவரின் பழைய வரலாறு மக்கள் மறந்து விடுவார்களா என்ன? இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வாய்க்கு வந்ததை பேசக்கூடாது டிஜிபியை ஆதரித்து பேசுவதற்கு தகுதி வேண்டும் சட்டத்தை மதிப்பவர் ஆக சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவராக இருக்க வேண்டும் ஆன்மீகம் வேஷம் போட்டு கொள்ள கூடாது என அண்ணாமலை தெரிவித்தார்.

 

 


மேலும் படிக்க...



Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..



இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..



முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 




ட்விட்டர் பக்கத்தில் தொடர