சென்னையில் பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு இன்றைக்கு (02.06.2023) கடும் வெப்பம் நிலவியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வழக்கமாக மே மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் ஆனால் இந்த ஆண்டு மே மாதம் தொடங்கியது முதலே பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இருப்பினும் சென்னை, வேலூர், திருத்தணி, திருப்பத்தூர், மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் சூரியன் சுட்டெரிக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 41 முதல் 43 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகிறது. ‘


அந்த வகையில், பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு சென்னையில் இன்று கடும் வெப்பம் நிலவியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் (நுங்கம்பாக்கம்) 40 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் பதிவாகியுள்ளது. அதுவும் இதுவரை ஜூன் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இது.  சென்னை நுங்கம்பாக்கத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக கடந்த 2014- ஆம் ஆண்டு ஜூன் அன்று 41.9 டிகிரி செல்சியஸ் அதிகபட்சமாக பதிவாகியிருந்தது.


நகரின் மற்ற பகுதிகளில் பதிவான வெப்பம்:


வில்லிவாக்கம்- 42.6 டிகிரி செல்சியஸ், செம்பரம்பாக்கம் - 42.6 டிகிரி செல்சியஸ், மீனம்பாக்கம் -  42.4 டிகிரி செல்சியஸ், வானகரம் - 42.2 டிகிரி செல்சியஸ், பொத்தேரி - 42.0 டிகிரி செல்சியஸ், புழல் - 42.0 டிகிரி, கிண்டி - 41.7, தாம்பரம் - 41.6 டிகிரி செல்சியஸ், தாம்பரம் 41.6 டிகிரி செல்சியஸ், நந்தனம் 40.5 செல்சியஸ், எம்.சி.ஆர். நகர் -  40.3 டிகிரி செல்சியஸ், பள்ளிக்கரணை 40.1 டிகிரி செல்சியஸ், திருவள்ளூர்  41.5 டிகிரி செல்சியஸ், திருத்தணி - 41.3 டிகிரி செல்சியஸ், புதுச்சேரி 40.6 டிகிரி செல்சியஸ், வேலூர் 40.3 டிகிரி செல்சியஸ், கடலூர் 40.3 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 40.1 டிகிரி செல்சியஸ் 


 உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டியவை:


கொத்தமல்லி வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவும், பெருஞ்சீரகம் விதைகள் நல்ல செரிமானத்தை ஊக்குவிக்கின்றன. புதினா உடல் வெப்பநிலையைக் குறைக்கிறது, அதே நேரத்தில் சீரக விதைகள் வீக்கம் மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் ஆகியவற்றை எதிர்த்துப் போராடும்.




 


கொத்தமல்லி:


இது உடலில் இருந்து வியர்வையை வெளியேற்ற உதவுகிறது. இதனால், உடலின் வெப்பநிலை குறையும்.  புத்துணர்ச்சியும் இருக்க உதவுகிறது. இதனால் செரிமான மண்டலம் மகிழ்ச்சியாக வேலை செய்யும்.



  • ஒரு டீஸ்பூன்  தனியாவை எந்த உணவு சமைத்தாலும் சேர்க்கலாம்.

  • கொத்தமல்லி இலைகளை வெள்ளரி மற்றும் தக்காளியுடன் சேர்த்து சால்ட்  தயாரிக்க பயன்படுத்தலாம்.

  • கொத்தமல்லி சட்னி அடிக்கடி சாப்பிடலாம்.


பெருஞ்சீரகம்: 


 இதில் உள்ள வைட்டமின் சி செரிமானத்தை தூண்டுகிறது. உங்களை புத்துணர்ச்சியுடன் இருக்க செய்கிறது.




 



  • சமைக்கும் உளவுகளில் சிறிது பெருஞ்சீரம் தாளிக்கலாம்.

  • பெருஞ்சீரக டீ நல்ல சாய்ஸ்.

  •  

  • சாலட் உணவுகள் சாப்பிடும்போது பெருஞ்சீரத்தை பொடித்து அதில் தூவி சாப்பிடலாம்.

     



சீரகம்:


சீர்+ அகம்- சீரகம் -


உடலின் உட்புறத்தை சீராக்குகிறது என்று பொருள்.  இந்திய சமையலில் இது மிக முக்கியமானது. இதன் நறுமணம், சுவை ஆகியவற்றை விடவும், இது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் செரிமானத்திற்கும் உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் திறன் கொண்டது. கோடைக்காலத்திற்கு ஏற்ற மசாலா.



  • சமையில் தினமும் சீரகம் சேர்க்கலாம்.

  • மோர், எலுமிச்சை ஜூஸ் ஆகியவற்றுடன் சீரகத் தூள் சேர்த்து சாப்பிடலாம்.



  •  



புதினா:


புதினா ஒரு சிறந்த மூலிகை. இது அஜீரணக் கோளாறுகளை தடுக்கும். அமிலத்தன்மை மற்றும் இரைப்பை அழற்சி தொடர்பான நெஞ்செரிச்சல் உள்ளிட்டவைகளை போக்கும். கோடை வெயிலிலும் உங்களை புத்துணர்வுடன் வைத்திருக்கும்.



  •  டீயில்  புதினா சேர்க்கலாம்.

  • புதினா சட்னி சாப்பிடலாம்.

  • லெமன் புதினா ஜூஸ் குடிக்கலாம்.