Anna University Issue: ஞானசேகரன் மீது பாய்ந்த குண்டர் சட்டம்.! அண்ணா பல்கலைக்கழக வழக்கில் தீவிரம் காட்டும் எஸ்.ஐ.டி

Anna University Student Issue Gnanasekaran: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.

Continues below advertisement

அண்ணா பல்கலக்கழக வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்:

கடந்த டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் , சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்ட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவானது, இவ்வழக்கை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. 

நேற்று வீட்டில்  சோதனை:

இந்நிலையில், நேற்று ஞானசேகரன் வசிக்கும் கோட்டூர்புரம் மண்டபம் தெருவில் ,10க்கும் மேற்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். சுமார் 6 மணி நேரம் ஞானசேகரன் வீட்டில் பெட்டி பெட்டிகளாக ஆவணங்களை புலனாய்வு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

இந்த நிலையில், ஞானசேகரன் மீதான வழக்கானது, குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே , 3 முறை குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தகவல் தெரிவிக்கின்றன. 

குண்டாஸ் சட்டத்தின்  கீழ் வழக்குப்பதிவு

அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் யாரிடமோ போனில் சார் என்று பேசியதாக பாதிக்கப்பட்ட மாணவி கூறியதாக புகார் எழுந்தது. அதனால் யார் அந்த சார் என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து அதிமுக, பாஜக  உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. 

இவ்விவகாரம் குறித்த அமைச்சர் சேகர்பாபு, “ குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட அந்த குற்றவாளி உடனடியாக பிடிகப்பட்டு முதல் கட்ட நிவாரணமாக அவர் கட்டோடு இருந்ததை பார்த்திருப்பீர்கள். அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என  தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழுவானது, ஞானசேகரன் வீட்டில் நடத்திய சோதனையடுத்து, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றிய நிலையில், விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது, ஞானசேகரன் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola