புதியதாக 150 அரசு விரைவு சொகுசு பேருந்துகள் தொடக்கம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன தெரியுமா?

முதியவர்கள் , குழந்தைகளுக்காக 50 பேருந்துகளில் கீழ் படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் இன்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு. 90.52 கோடி ரூபாய் மதிப்பிலான 150 இருக்கை மற்றும் படுக்கை வசதியுள்ள புதிய பேருந்துகளின் இயக்கத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

Continues below advertisement

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 200 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 150 புதிய பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டது. புதிய பேருந்தில் மாற்றுத்திறனாளிகள். முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக பயணிக்கும் வகையில் கீழ்கண்ட சிறப்பு அம்சங்கள் உள்ளது.

புதிய பேருந்தில் பயணிகளுக்கான சிறப்பம்சங்கள்


இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில், பயணிகளின் சொகுசு பயணத்திற்காக முன்புற Air Suspension வசதி செய்யப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளின் வசதிக்காக 50 பேருந்துகளில் கீழ் படுக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளன.

படுக்கை இரண்டிற்கும் இடையே அதிகரித்த இடம் மற்றும் தடுப்பு வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு இருக்கை மற்றும் படுக்கைக்கும் தனித்தனியாக தனிப்பட்ட சார்ஜிங் போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு படுக்கைக்கும் தனித்தனியாக பயணிகள் வசதிக்காக தனித்தனி மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பிற்காக ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் அபாய ஒலி எழுப்பி (SOS) அமைக்கப்பட்டுள்ளது.

நடத்துனரால் பயணிகளுக்கு தகவல் அறிவிப்புகளுக்கான ஒலி பெருக்கி (Micro Phone) அமைக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் கடிகராம்

பயணிகளின் சுமை பெட்டி மற்றும் சரக்கு பார்சலுக்காகவும் போதிய இட வசதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அரசு நிர்ணயம் செய்த அளவுகளின் அடிப்படையில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் புதிய பேருந்துகளின் Engine வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட பிரேக்கிங் செயல் திறனுக்காக எலக்ட்ரானிக் மேக்னடிக் ரேடர் (EMR) நிறுவப்பட்டுள்ளது.

இன்ஜின் தீயை முன் கூட்டியே திறம்பட அனுமானித்து. தீ கட்டுபட்டு அடக்கும் (FDSS) அமைப்பு கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் , இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் பி. கே. சேகர்பாபு , மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், சென்னை பெருநகர மேயர் பிரியா ராஜன் அவர்கள் மற்றும் துணை மேயர் திரு. மகேஷ்குமார் , போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி , மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன், மாநகர போக்குவரத்து கழக இணை மேலாண் இயக்குநர் நடராஜன், உயர் அலுவலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்

Continues below advertisement
Sponsored Links by Taboola