செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார செங்கல்பட்டு மாம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்சாரம் பராமரிப்பு பணி காரணமாக , மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


பராமரிப்பு பணிகள்


பல்வேறு பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாடு முழுவதும், மாதத்தில் ஒரு நாள் மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். அவ்வாறு மின் நிறுத்தம் செய்யும் நாள்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். அதேபோன்று பருவம் மழை முன்னிட்டு அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் திருப்பெரும்புதூர் கோட்டம், இருங்காட்டுக்கோட்டை ன துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது .


மாம்பாக்கம் துணை மின் நிலையம் மின்தடை அறிவிப்பு 


மாம்பாக்கம் துணை மின் நிலையம்: மாம்பாக்கம், வேங்கடமங்கலம் ,பொன்மார், கொளத்துார், கீழ்கோட், தையூர், எடையூர், மேலக்கோட்டையூர், புதுப்பாக்கம் கண்டிகை, வெங்கப்பாக்கம், ரத்தினமங்கலம் ஒரு பகுதி, கேளம்பாக்கம், ஓ.எம்.ஆர்., சாலை ஒரு பகுதி, சாத்தான்குப்பம் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகள்.


மின்தடை மேற்கொள்ளும் நேரம் : காலை 9:00 மணி முதல், மாலை 2:00 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளது.


திருப்பெரும்புதூர் கோட்டம், சிப்காட் மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை அறிவிப்பு.


திருப்பெரும்புதூர் கோட்டம், சிப்காட் மாம்பாக்கம் 230/110/33-11 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 24.09.2024 (Tuesday) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 14.00 மணி வரை சுங்குவார்சத்திரம், சேந்தமங்கலம், சந்தவேலூர், பாப்பான்குழி, இராமானூஜபுரம், கீரநல்லூர், குண்ணம், சிறுமாங்காடு, அயீமச்சேரி, ஆரனேரி, சிவன்கூடல், திருமங்கலம், மொளச்சூர், சோகண்டி, காந்தூர், திருப்பந்தியூர், புதுப்பட்டு, பண்ணுர், கண்ணுர், குன்னவாக்கம், ஏலக்காமங்கலம், பன்ருட்டி, பன்ருட்டி கண்டிகை, வெண்பாக்கம் மற்றும் இதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என திருப்பெரும்புதூர் கோட்டம் செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.


திருப்பெரும்புதூர் கோட்டம், திருப்பெரும்புதூர் உப கோட்டம், திருப்பெரும்புதூர் துணை மின் நிலையத்தில் மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுவதால் மின்தடை அறிவிப்பு:


திருப்பெரும்புதூர் கோட்டம், திருப்பெரும்புதூர் உப கோட்டம், திருப்பெரும்புதூர் 110/33-11 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் 33 KV and 11 KV feeders அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 27.09.2024 (Friday) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 14.00 மணி வரை மப்பேடு, செங்காடு, உசேன் நகரம், விஸ்வநாதகுப்பம், அமுஞ்சிவாக்கம், சமத்துவபுரம், இருங்காட்டுக்கோட்டை, நெமிலி, சிவன்தாங்கல், என்.ஜி.ஒ காலனி, சுகந்தரும்பேடு, தண்டலம், மேவலூர்குப்பம், மண்ணூர், நயப்பாக்கம், பாப்பரபாக்கம் ரோடு, வளர்புரம், கிறிஸ்தவ கண்டிகை, செட்டிப்பேடு மற்றும் இதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என திருப்பெரும்புதூர் கோட்டம் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.