நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக மருத்துவமனைகளில் தொடர் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவிவருகிறது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து டெண்டர் அடிப்படையில் 50,000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இறக்குமதி செய்யப்படும் என மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.


இதன்மூலமாக ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவும் 12 முக்கிய மாநிலங்களுக்கான தேவை பூர்த்திசெய்யப்படும். மருத்துவமனைகளுக்கான கருவிகள் மற்றும் ஆக்சிஜன் தேவை குறித்து ஆய்வு செய்யும் சுகாதாரத்துறையின் சிறப்புக்குழு குழு இந்த முடிவை எட்டியுள்ளது. 


Also Read: வெளிமாநிலத்திற்கு அனுப்பப்படும் தமிழக ஆக்ஸிஜன்: தமிழகத்தில் தட்டுப்பாடு வாய்ப்பு?