Breaking News LIVE : ”இது ஓட்டுப் போடாதவர்களுக்குமான ஆட்சி” - முதல்வர் ஸ்டாலின்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

உமா பார்கவி Last Updated: 07 May 2023 05:26 PM
நீட் தேர்வு நிறைவு..!

மருத்துவ கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு தற்போது நடந்து முடிந்துள்ளது.

வண்டலூரில் முகாமிட்ட சுற்றுலா பயணிகள்..!

வார விடுமுறையான இன்று வண்டலூர் விலங்குகள் உயிரியல் பூங்காவில் சுமார் 25 ஆயிரம் பேர் வந்துள்ளனர் என பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது. 

Breaking News LIVE : ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக தி கேரளா ஸ்டோரி படம் - தமிழிசை

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு எதிராக தி கேரள ஸ்டோரி படம் சித்தரிக்கப்பட்டுள்ளது என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

Breaking News LIVE : ”இது ஓட்டுப் போடாதவர்களுக்குமான ஆட்சி” - முதல்வர் ஸ்டாலின்

ஓட்டுப்  போடாதவர்கள் வருத்தப்படும் அளவிற்கு தமிழகத்தில் ஆட்சி நடைபெற்று வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Breaking News LIVE : முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

திமுக அரசு 3ஆம் ஆண்டில் அடியெத்து வைப்பதையொட்டி, பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

Breaking News LIVE : எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

2021 சட்டமன்ற தேர்தலின் போது வேட்புமனுவில் சொத்து மதிப்பை குறைத்து காட்டியதாக வழக்கறிஞர் மிலானி அளித்த புகாரில் எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Breaking News LIVE : ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு

நாளை நடைபெறவிருந்த ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Breaking News LIVE : காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Breaking News LIVE : கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் நாளை ஓய்கிறது

கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை நாளை மாலையுடன் நிறைவடைகிறது. 

Breaking News LIVE : வேங்கைவயல் விவகாரம் - நாளை இரத்தமாதிரி பரிசோதனை

புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக 10 பேருக்கு நாளை இரத்தமாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

Breaking News LIVE : மணிப்பூரில் கலவரம் - நீட் தேர்வு ஒத்திவைப்பு

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், கலவரம் காரணமாக மணிப்பூர் மாநிலத்தில் மட்டும் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Breaking News LIVE : இன்று நீட் தேர்வு - சுமார் 20 லட்சம் பேர் எழுதுகின்றனர்

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெற உள்ளது. 

Breaking News LIVE : சூறைக்காற்று - திருவள்ளூர் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Background

சென்னையில் தொடர்ந்து மாற்றமின்றி  விற்பனையாகும் பெட்ரோல் மற்றும் டீசலின் இன்றைய விலை நிலவரத்தைக் காணலாம். 


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம் 


இந்நிலையில் சென்னையில் இன்று (மே.7) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி இன்றோடு 351ஆவது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.


இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.


அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.