Breaking News LIVE : அண்ணாமலைக்கு கனிமொழி எம்.பி.நோட்டீஸ்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

உமா பார்கவி Last Updated: 29 Apr 2023 01:01 PM
கலைஞர் தொலைக்காட்சியில் எனக்கு பங்கு இல்லை - கனிமொழி எம்.பி.

கலைஞர் தொலைக்காட்சியில் எனக்கு எந்த பங்கும் இல்லை என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

Breaking News LIVE : அண்ணாமலைக்கு கனிமொழி எம்.பி.நோட்டீஸ்

திமுக சொத்துப்பட்டியல் வெளியிட்ட அண்ணாமலை மன்னிப்பு கேட்க கோரி எம்.பி.கனிமொழி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Breaking News LIVE : ”பாஜக ஆட்சியை ஏற்க கர்நாடக மக்கள் தயார்" - பிரதமர் மோடி

மீண்டும் பாஜக ஆட்சியை ஏற்க கர்நாடக மக்கள் தயாராக உள்ளனர் என பிரதமர் மோடி தேர்தல் பரபரப்புரையில் பேச்சியுள்ளார்.

Breaking News LIVE : உரிய வழிகாட்டுதல்களுடன் பேனா சின்னம் அமைக்கப்படும் - அமைச்சர் மெய்யநாதன்

உரிய வழிகாட்டுதல்களுடன் பேனா நினைவு சின்னம் அமைக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

Breaking News LIVE : மருத்துவ சுற்றுலா மாநாடு - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு அரசின் மருத்துவச் சுற்றுலா மாநாட்டை சென்னையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Breaking News Live : நியாய விலை கடைகளில் வாங்காத பொருளுக்கு பில் போட்டால் நடவடிக்கை

 நியாய விலைக்கடைகளில் வாங்காத பொருளுக்கு பில் போட்டால் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு பதிவாளர் தெரிவித்துள்ளார். 

Breaking News LIVE : இந்தியாவில் ஒரே நாளில் 7,171 பேருக்கு கொரோனா

இந்தியாவில் நேற்று 7,533 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 7,171 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

Breaking News LIVE : ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் சோதனை நிறைவு

சென்னையில் ஜி ஸ்கொயர்  நிறுவனத்தில் நடைபெற்று வந்த வருமான வரி சோதனை நிறைவு பெற்றுள்ளது.

Breaking News LIVE : காவலர் தீக்குளிப்பு - உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

திருச்சி லால்குடி காவல்நிலையம் முன் சிறைக்காவலர் தீக்குளித்த விவகாரத்தில் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Breaking News LIVE : சென்னையில் போலி என்ஐஏ அதிகாரி கைது

தேசிய புலனாய்வு முகமை அதிகாரி எனக் கூறி  பணம் வசூலித்து மோசடி செய்தவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Breaking News LIVE : மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் - பிரியங்கா காந்தி நேரில் ஆதரவு

டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நேரில் சென்று காங்கிரசின் பிரியங்கா காந்தி ஆதரவு தெரிவித்தார்.

Breaking News LIVE : டெல்லி விமானநிலைய புதிய முனையத்தில் பெண் தற்கொலை

சென்னை விமான நிலைய புதிய முனையத்தில் 4வது மாடியில் இருந்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Breaking News LIVE : 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Breaking News LIVE : பேருந்து கவிழ்ந்து 16 பேர் காயம்

திண்டுக்கல் தெத்துப்பட்டி அருகே பேருந்து கவிழ்ந்த விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

Breaking News LIVE : பேனா நினைவுச்சின்னம் - அனுமதி அளித்தது மத்திய அரசு

தமிழ்நாடு அரசு சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் கடலின் நடுவே பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

Background

உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம் 


இந்நிலையில் சென்னையில் இன்று (ஏப்ரல்.29) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி இன்றோடு 343ஆவது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.



இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.


அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.