Breaking News LIVE : செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தவில்லை - அமலாக்கத்துறை

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

உமா பார்கவி Last Updated: 20 Jun 2023 12:32 PM
Breaking News LIVE : உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனைவி கேவியட் மனு

அமலாக்கத்துறை மேல்முறையீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனைவி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். 

Breaking News LIVE : சென்னையில் 295 சதவீதம் அதிக மழை பொழிவு

சென்னையில் ஜூன் மாதத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழையை விட 295 சதவீதம் அதிக மழை பதிவாகி உள்ளது.

Breaking News LIVE : வேங்கைவயல் விவகாரம் - இதுவரை 158 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக இதுவரை 158 பேரிடம் விசாரித்துள்ளதாக சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது. 

Breaking News LIVE : கொலைகள் அதிகரிப்பு - ஆளுநருக்கு கெஜ்ரிவால் கடிதம்

டெல்லியில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக துணைநிலை ஆளுநருக்கு முதல்வர் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். 

Breaking News LIVE : செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தவில்லை - அமலாக்கத்துறை

செந்தில்பாலாஜியின் உடல்நிலை கருதி அவரிடம் விசாரணை நடத்தவில்லை என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Breaking News LIVE : குறைந்தது தங்கம் விலை

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,280 ஆகவும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,535 ஆகவும் விற்பனையாகிறது. 


 

Breaking News LIVE : மழை எதிரொலி - அமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

மழை எதிரொலியால் வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, சென்னையைச் சேர்ந்த அமைச்சர்கள் சேகர்பாபு, மா சுப்பிரமணியன் உள்ளிட்டோரை சென்னையிலேயே இருந்து பணிகளை கண்காணிக்க முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார். 


 

Breaking News LIVE : செந்தில்பாலாஜிக்கு நாளை அதிகாலை அறுவை சிகிச்சை

நாளை அதிகாலை செந்தில்பாலாஜிக்கு பை-பாஸ் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

Breaking News LIVE : பேசின் பாலத்தில் ரயில் போக்குவரத்து சீரானது

சென்னை பேசின்பிரிட்ஜ் அருகே ரயில்பாதையில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டதால் ரயில் போக்குவரத்து சிரானது.

Breaking News LIVE : கலைஞர் கோட்டத்தை இன்று திறந்து வைக்கிறார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

திருவாரூரில் ரூ.12 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று திறந்து வைக்கிறார். 

Breaking News LIVE : மேட்டூர் அணையிலிருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு

சேலம் மேட்டூர் அணையில்  இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 10,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. 

Breaking News LIVE : சத்துமாவு சாப்பிட்ட மாணவர்களுக்கு மயக்கம்

சென்னை தி.நகரில் தனியார் பள்ளி மாணவர் விடுதியில் சத்துமாவு சாப்பிட்ட 6 மாணவர்கள் மயக்கம் அடைந்துள்ளார்.

Breaking News LIVE : சத்துமாவு சாப்பிட்ட மாணவர்களுக்கு மயக்கம்

சென்னை தி.நகரில் தனியார் பள்ளி மாணவர் விடுதியில் சத்துமாவு சாப்பிட்ட 6 மாணவர்கள் மயக்கம் அடைந்துள்ளார்.

Breaking News LIVE : சத்துமாவு சாப்பிட்ட மாணவர்களுக்கு மயக்கம்

சென்னை தி.நகரில் தனியார் பள்ளி மாணவர் விடுதியில் சத்துமாவு சாப்பிட்ட 6 மாணவர்கள் மயக்கம் அடைந்துள்ளார்.

Breaking News LIVE : கார் மீது மரம் விழுந்து ஒருவர் படுகாயம்

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் கார் மீது மரம் விழுந்து ஓய்வுபெற்ற தனியார் நிறுவன ஊழியர் படுகாயம் அடைந்துள்ளார்.

Breaking News LIVE : ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது

ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர்  கைது செய்தனர்.

Background

உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 







இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (ஜூன் 20) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 394 நாட்களாக இன்று விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





 




 


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.






- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.