Breaking News LIVE : கர்நாடக முதல்வர் யார்...? ராகுல் காந்தியுடன் சித்தராமையா சந்திப்பு...!

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

உமா பார்கவி Last Updated: 17 May 2023 05:43 PM
Breaking News LIVE :சென்னை, தாம்பரம் அருகே ரூ. 535 கோடி பணத்துடன் சென்ற வாகனம் திடீரென பழுதானதால் பரபரப்பு

சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து 2 லாரிகளில், விழுப்புரத்தில் உள்ள வங்கிகளுக்கு கொண்டு செல்லும்போது பழுதாகி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.பணத்துடன் நிற்கும் லாரிகளுக்கு, தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு.


 

Breaking News LIVE : டெல்லியில் ஆதரவாளர்களுடன் டி.கே.சிவக்குமார் ஆலோசனை

கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே.சிவக்குமார் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் பதவி தொடர்பாக சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ராகுல் காந்தியை தனித்தனியாக சந்தித்தார்.

Breaking News LIVE :ஆதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

சென்னையில் ஆதிமுக செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் தொடங்கியது

Breaking News LIVE :ஹெலிகாப்டர் சுற்றுலாவிற்கு உயர்நீதிமன்றம் தடை

 நீலகிரி மாவட்டம் கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா செய்யும் திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது

Breaking News LIVE :கர்நாடக முதலவர் யார் என்பது இன்று அல்லது நாளை தெரிந்து விடும்

கர்நாடக முதல்வர் யார் என்பது குறித்து இன்று அல்லது நாளை தெரிந்து விடும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். 

Breaking News LIVE : கர்நாடக முதல்வர் யார்...? ராகுல் காந்தியுடன் சித்தராமையா சந்திப்பு...!

கர்நாடக முதல்வர் தேர்வு தொடர்பாக டெல்லியில் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா சந்தித்தார். 

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு...!

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 38% ல் இருந்து 42% ஆக உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ஏப்.1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Breaking News LIVE : வட சென்னை - 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வட சென்னை அனல் மின்நிலைய 2வது நிலையில் கொதிகலன் பழுது காரணமாக 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Breaking News LIVE : ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநரின் இடங்களில் சிபிஐ சோதனை

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் துணைநிலை ஆளுநர் சத்யபால் மாலிக் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

Breaking News LIVE : சவுரங் கங்குலிக்கு இசட் பிரவு பாதுகாப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரங் கங்குலிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

Breaking News LIVE : ராகுல் காந்தியை தனித்தனியாக சந்திக்கும் சிவகுமார், சித்தராமையா

கர்நாடக முதல்வர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் ராகுல் காந்தியை தனித்தனியாக சித்தராமையா, டி.கே.சிவகுமார் இன்று சந்திக்கின்றனர்.

Breaking News LIVE : கர்நாடக எம்.எல்.ஏக்கள் கார்கேவுடன் சந்திப்பு

புதிதாக தேர்வு செய்யப்பட்ட கர்நாடக எம்எல்ஏக்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்துள்ளனர்.

Breaking News LIVE : கள்ளச்சாராய வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

மரக்காணம், செங்கல்பட்டு அருகே கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக தேடப்பட்டு வந்து முக்கிய நபர் ஏழுமலை கைதாகி உள்ளார்.

Breaking News LIVE : தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு

சென்னையில 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.45,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Breaking News LIVE : 20 மாவட்டங்களில் சதமடித்த வெயில் - வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



 

Breaking News LIVE : லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு

திரைப்பட தயாரிப்பு லைகா நிறுவனத்தில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்துள்ளது.

Breaking News LIVE : பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து குறைந்தது

தொடர் மழை காரணமாக தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து குறைந்துள்ளது.

Breaking News LIVE : சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் திமுகவில் சேர்ந்தார்

சென்னை வடக்கு மாவட்ட தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் திமுக கட்சியில் சேர்ந்துள்ளார்.

Breaking News LIVE : புழலில் கைதிகளிடம் செல்போன் பறிமுதல்

திருவள்ளூர் புழல் சிறையில் தண்டனை பிரிவில் கைதிகள் இருவரிடம் இருந்து செல்போன், சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டது.

Breaking News LIVE : விருகம்பாக்கத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள பஞ்சர் கடை முன் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசிச் சென்றனர்.

Breaking News LIVE : கள்ளச்சாராய உயிரிழப்பு - கைதான 5 பேர் சிறையில் அடைப்பு

செங்கல்பட்டு சித்தாமூர் அருகே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த வழக்கில் கைதான 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Background

சென்னையில் தொடர்ந்து மாற்றமின்றி  ஓராண்டை நெருங்கி கொண்டிருக்கும்  பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையின் இன்றைய விலை நிலவரத்தைக் காணலாம். 


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம் 


இந்நிலையில் சென்னையில் இன்று (மே.17) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி இன்றோடு 361வது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









 


இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.


அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.