டெல்லி வணிக வளாகத்திற்கு வந்த பெண் ஒருவர் தனது தலைமுறையில் ஹேர் பேண்ட் அணிவதற்கு பதிலாக உயிருடன் இருக்கும் பாம்பை சுற்றி வந்துள்ளார். இதனால் அங்கிருந்தவர்கள் பார்த்து மிரண்டனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


விலங்குகள், பறவைகள், உயிரினங்கள் குறித்த வீடியோக்கள் அவ்வபோது சமூக வலைதளங்களில் பறவும். அதில், சில 'அடடா' என்று சொல்ல வைத்தாலும், சில வீடியோக்கள் கதற வைத்து விடுகிறது. 


அந்த வகையில், தற்போது வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பெண் ஒருவர் வணிக வளாகத்தில் சுற்றி வருகிறார். அவரின் தலைமுடியில் ரப்பர் பேண்ட் போல் ஒன்றை அணிந்திருந்தார். அது பார்ப்பதற்கு பாம்பின் தோல் போல் இருந்தது. அது ரப்பர் பேண்டின் மாடலாக இருக்கும் என அனைவரும் ரசித்து பார்த்தனார். ஆனால் பிறகுதான் தெரிந்தது அது உயிருடன் இருக்கும் பாம்பு என்று. சிலர் அதை தொட்டுப்பார்க்க சென்றபோது பாம்பு அசைந்தது. 


 






இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது 15000 க்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். 


இதேபோல், கடந்த மாதம், ஒரு பெண் பாம்பை முத்தமிட்டு அரவணைக்கும் வீடியோ வைரலானது. அந்த கிளிப் பெண்ணின் கழுத்தில் பாம்பு சுற்றியபடி தலையை அவள் முகத்தில் சாய்த்தபடி இருந்தது. சில நொடிகள் அந்த பாம்பை அரவணைத்து அதன் கன்னத்தில் முத்தமிட்டு 'ஐ லவ் யூ' என்று வாய்க்கு அருகில் வந்தபடி அந்த பெண் சொன்னார்.