திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும் என்பது பலரது நம்பிக்கையாக இருந்து வருகிறது. திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வந்தால் வாழ்க்கையில் திருப்பம் எற்படும் என்பதற்காக கோயிலுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பதி என்றதும் ஏழுமலையான் நினைவோடு அங்கு பிரசாதாமக வழங்கப்படும் ‘லட்டு’ சேர்ந்துகொள்வதை தவிர்க்க முடியாது. திருப்பதி லட்டு என்றால் அவ்வளவு பிரபலம். லட்டின் தனித்துவ சுவைக்கு அடிமையாகாதோர் இல்லை என்றே சொல்லலாம். அதுவும் தரிசனத்திற்கு சென்று திரும்புவர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது; கூடுதல் லட்டு வேண்டுமானால் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். 


’திருப்பதி போயிட்டு வந்தேன்’ என்று யாரிடம் சொன்னாலாலும் ‘லட்டு எங்கே’ என்பதுதான் உடனடியாக வரும் கேள்வியாக இருக்கும். திருப்பதி லட்டுவிற்கு மட்டும் எப்படி தனிச்சுவை இருக்கிறது? இது எப்படி செய்யப்படுகிறது? திருப்பதியில் பிரசாதமாக லட்டு கொடுக்கும் வழக்கம் எப்படி வந்தது உள்ளிட்டவற்றை இக்கட்டுரையில் காணலாம். 


308 ஆண்டுகால வரலாறு


1715 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2- ஆம் தேதியில் இருந்து பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், 1803 ஆம் ஆண்டிலிருந்துகோயிலில் லட்டு விற்பனை செய்யப்படும் நடைமுறை தொடங்கியது. 308 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இந்த லட்டு பிரசாதம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தனியே ஒரு துறை அமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டு வருகிறது.


நாள்தோறும் பல லட்சக்கணக்கான லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. உற்சவ நாட்களில் குறைந்தது 5 லட்சம் லட்டுகள் வரை ஸ்டாக் இருக்கும் என்று கூறப்படுகிறது. இத்தனை அண்டுகளும் இதன் சுவை, மணம் மாறமால் இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் ஒன்றாக உள்ளது. மேலும், இதை கல்யாணம் என்பவர் வடிவமைத்துள்ளார். அலங்கார பிரியரான பெருமாளுக்கு பெரிய அளவில் லட்டு பிரசாதமாக வழங்கப்பட வேண்டும் என முடிவெடுத்து பெருமாளை வழிபட வருபவர்களுக்கு பெரிய திருப்பதி லட்டு வழங்கப்பட்டு வந்தது. இதன் அளவு நாளடைவில் சிறிதாக மாறிவிட்டது. 


திருப்பதியில் மூன்று வகையான லட்டு தயாரிக்கப்படுகின்றன. ‘அஸ்தானம்’, கல்யாணோத்வசம் புரோக்தம் என மூன்று வகைகளாக தயாரிக்கப்பட்டு வருகிறது. திருப்பதியில் மூன்று வகையான லட்டு தயாரிக்கப்படுகின்றன. ‘அஸ்தானம்’, கல்யாணோத்வசம் புரோக்தம் என மூன்று வகைகளாக தயாரிக்கப்பட்டு வருகிறது. விஷேச நாட்களில் 750 கிராம்  எடையுடன் தயாரிக்கப்படும் லட்டு முக்கியமானவர்களுக்கு வழங்கப்படுகிறது. iது பிற லட்டுக்களைவிட மிகுதியான அளவில் முந்திரி, பாதாம், குங்குமப்பூ போன்றவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. கோயிலில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளின்போது கல்யாணோத்வ லட்டு தயாரிக்கப்படும். இது அளவில் சற்று பெரியதாக இருக்கும். கோயில் உற்சவங்களில் கலந்துகொள்பவர்களுக்கு இது பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதோடு, 175 கிராம் எடை கொண்ட புரோக்தம் லட்டு பக்தர்களுக்கு கட்டணமின்றி (ஒரு லட்டு) வழங்கப்படுவதாகும். இப்படி பல வகைகளில் லட்டு வழங்கப்படுகிறது. டோக்கன் பெற்று கொண்டு லட்டு வாங்கலாம். பணம் செலுத்தி கூடுதல் லட்டு பெற்று கொள்ளலாம். 


புவிசார் குறியீடு


 2009 ஆம் ஆண்டு திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீட்டு வழங்கப்பட்டது. பின்னர், திருப்பதி லட்டுக்கு காப்புரிமையும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பதி லட்டு என்ற பெயரில் யாராலும் இதை தயாரிக்க முடியாது.


திருப்பதி லட்டு ஸ்பெஷல் ஃபார்முலா


 கடலை மாவு, சர்க்கரை, முந்திரி, நெய், ஏலக்காய், எண்ணெய், கற்கண்டு, பாதாம் பருப்பு, உலர் திராட்சை என பல பொருட்கள் சேர்ந்த்து திருப்பதியில் லட்டு தயாரிக்கப்படுகிறது. முன்பு, ஏராளமான நபர்கள் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இப்போது இயந்திரங்கள் பயன்படுத்தியும் லட்டு தயாரிக்கப்படுகிறது. திருப்பதி லட்டு சாப்பிடுவதற்கு ஒரு கதையே சொல்லப்படும். திருப்பதி லட்டை நினைத்தப்படி, யார் வேண்டுமானும் சாப்பிட்டுவிட முடியாது. ஏழுமலையான் யாரை காண விரும்புகிறாரோ அவர்களே திருப்பதி லட்டு சாப்பிட கொத்து வைத்தவர்கள் - இப்படியான நம்பிக்கைகளும் பக்தர்களிடையே சொல்லப்படுவதுண்டு.