Just In





Rangoli Kolam: பக்தர்களே! வாசலில் இனிமேல் இந்த முருகன் ரங்கோலி கோலங்களை போடுங்க!
செவ்வாய், வெள்ளி போன்ற முருகனுக்கு உகந்த நாட்களில் வீட்டின் வாசல்களில் இந்த முருகன் கோலங்களை இடலாம்.

தமிழ்நாட்டில் வீட்டை மட்டுமின்றி வீட்டு வாசலை அலங்கரிப்பதிலும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக, பொங்கல், தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் மக்கள் தங்கள் வீட்டின் வாசலில் வண்ண, வண்ண கோலங்கள் இட்டு அசத்தினர்.
இது மட்டுமின்றி கார்த்திகை தீபம், தைப்பூசம், கந்தசஷ்டி, சிவராத்திரி, சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை போன்ற விழா நாட்களிலும் வீடுகளில் அந்தந்த விசேஷங்களுக்கு ஏற்றாற்போல கோலமிட்டு மக்கள் அசத்துவார்கள்.
முருகன் கோலங்கள்:
இந்த சூழலில், தமிழ்க்கடவுள் என்று பக்தர்களால் போற்றப்படும் முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களில் வாசலில் முருகனை போற்றும் விதத்தில் கீழே கண்ட புத்தம்புதிய டிசைன்களில் கோலங்கள் இடலாம்.

நடுவில் ஓம் முருகா என்று எழுதிய வகையிலும், வண்ணங்கள் சூழ மயில் வடிவத்திலும் நிறைந்த கோலங்களை வாசலில் இடலாம்.
முருகனுக்கு உகந்த செவ்வாய், வெள்ளிக்கிழமை நாட்களில் இந்த கோலத்தை இடலாம். மேலும், முருகனுக்கு மிகவும் உகந்த தைப்பூச நன்னாளிலும் இந்த கோலங்களை வாசலிலும், பூஜையறையிலும் இடலாம்.