தேவையான பொருட்கள் 


சாண்ட்விச் பிரட் – 5, சமையல் எண்ணெய் – தேவையான அளவு, பொடியாக நறுக்கிய பூண்டு – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டேபிள் ஸ்பூன், நறுக்கிய பெரிய வெங்காயம் – ஒன்று, நறுக்கிய குடைமிளகாய் – ஒன்று, நறுக்கிய பச்சை மிளகாய் – இரண்டு, உப்பு – தேவையான அளவு, மிளகுத்தூள் – முக்கால் ஸ்பூன், சில்லி பேஸ்ட் – ஒரு டேபிள் ஸ்பூன், வெங்காயத்தாள்-வெங்காயம் – ஒரு டேபிள் ஸ்பூன், கான்பிளவர் மாவு – ஒன்றரை ஸ்பூன், தக்காளி சாஸ் – 2 டேபிள்ஸ்பூன், தண்ணீர் – ஒரு கப், நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு.


செய்முறை


20  மிளகாய்களை மூழ்கும் அளவு தண்ணீரில் 15 நிமிடம் வேக வைத்துக்கொள்ள வேண்டும்.


தண்ணீர் வற்றியதும் மிளகாயை ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.


பின்னர் பிரட் துண்டுகளை எடுத்து அதன் ஓரத்தில் இருக்கும் பகுதிகளை வெட்டி எடுத்து விட வேண்டும்.


இடையில் இருக்கும் பகுதிகளை சதுர சதுரமாக சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்  வைத்துக் கொள்ள வேண்டும்.


அடுப்பில் கடாய் வைத்து, மூன்று டீஸ்பூன் எண்ணெய் விட்டு இந்த பிரட் துண்டுகளை சேர்த்து எல்லா புறமும் பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.


மீண்டும் கடாயில் எண்ணெய் சேர்த்து,  சூடானதும் பொடிதாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், குடை மிளகாய் ஆகியவற்றை  சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும்.


 வதங்கியதும் வினிகர், சோயா சாஸ், சில்லி பேஸ்ட் சேர்த்துக்கொள்ள வேண்டும். வினிகர் இல்லை என்றால் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ள வேண்டும். இவைகளை வதக்கி விட்டு தக்காளி சாஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


பின்னர் வெங்காயத்தாளுடன் கூடிய வெங்காயத்தையும் பொடி பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து வதக்க வேண்டும்.


இதில் அரை கப் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, தண்ணீர் வற்றி வரும் போது, சோள மாவுடன் அரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கரைத்து இதில் சேர்க்கவும்.


கிரேவி பதத்திற்கு கெட்டியாக வந்ததும்,  வறுத்து வைத்துள்ள பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்ட வேண்டும்.


அடுப்பை குறைந்த தீயில் வைத்து மசாலா பிரெட்டில் ஊரும் அளவிற்கு நன்கு பிரட்டி விட வேண்டும்.  இதில் கொத்தமல்லித்தழையை தூவி இறக்கினால் சுவையான சில்லி பிரெட் தயார்.