புளிசேரி என்பது மோர் மற்றும் வெள்ளரிக்காயைக் கொண்டு செய்யப்படும் ஒரு கேரள உணவு செய்முறையாகும்.


புளிசேரி செய்ய தேவையான பொருட்கள்:


1 கப் மோர் அல்லது தயிர்
1 கப் பூசணி (வெட்டப்பட்டது) அல்லது வெள்ளரி (நறுக்கப்பட்டது)


2 பூண்டு காய்கள்
2 வெங்காயம் (சின்ன வெங்காயம்)
1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
1/2 கப் தேங்காய், துருவியது
1/2 டீஸ்பூன் சீரகம்
2 பச்சை மிளகாய்
1/4 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
2 சிவப்பு மிளகாய்
1/4 டீஸ்பூன் வெந்தயம்
1/2 தேக்கரண்டி கடுகு
2 கறிவேப்பிலை
2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்
1 கப் தண்ணீர்
போதுமான அளவு உப்பு


புளிசேரி என்பது மோர் மற்றும் வெள்ளரிக்காயைக் கொண்டு செய்யப்படும் ஒரு உண்மையான கேரள செய்முறையாகும். நுட்பமான சுவைகளின் சரியான கலவையாக இது இருக்கிறது. இந்த புளிசேரி என்பது தமிழ்நாட்டில் வீடுகளில் செய்யப்படும் மோர் குழம்பிற்கு ஒத்ததாக காணப்படும்.


புளிசேரி செய்வது எப்படி?


1. தேங்காய் துருவலை பூண்டு, வெங்காயம் (சின்ன வெங்காயம்), சீரகம் மற்றும் பச்சை மிளகாயுடன் சேர்த்து நன்றாக பேஸ்ட் செய்துகொள்ள வேண்டும்.  


2. ஒரு கடாயை எடுத்து 3/4 கப் தண்ணீரில் நறுக்கிய பாகற்காய் அல்லது வெள்ளரி துண்டுகளை சேர்க்க வேண்டும். வெள்ளரிக்காய் சமைக்கும் நேரம் வேகமாக இருப்பதால், துண்டுகளை அதிகமாக வேகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதை உறுதிப்படுத்த, குறைந்த தீயில் சமைக்கவும்.


3. பாகற்காய் அல்லது வெள்ளரி நன்கு வெந்ததும், துருவிய தேங்காய் விழுது மற்றும் தயிர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். தொடர்ந்து குறைந்த தீயில் கொதிக்கவிடவும். கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும். 


4. தயிர் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்கு மேல் கொதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.


புளிசேரி மோர் குழம்பு செய்யும் போது அதற்கு மசாலா எவ்வாறு தயார் செய்யவேண்டும்:


1. கடாயில் தேங்காய் எண்ணெயை சூடாக்கி ,கடுகு மற்றும் பெருங்காயத்தை சேர்க்க வேண்டும். அவை பொரியத் தொடங்கும்போது, ​​சிவப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். இறுதியாக, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.


2.அவற்றை‌ பொன்னிறமாகும் வரை வதக்கவும். மேலும் காரத்துக்கு, சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும். இப்போது இறுதியாக இந்த கலவையை தயார் செய்த புளிசேரியில் சேர்க்கவும். நன்றாக கிளறவும்.


3. பின்னர் சூடான சாதத்துடன் பரிமாறுவது சரியாக இருக்கும்.


இந்த புளிசேரி மோர் குழம்பு சற்று புளிப்புத்தன்மை வாய்ந்ததாக இருக்கும், இதில் மோர் சேர்க்கப்படுவதால் தமிழ்நாட்டில் செய்யப்படும் மோர் குழம்பில் இருக்கும்படி இல்லாமல், அந்த புளிசேரி எனப்படும் மோர் குழம்பில் மாம்பழம், வெண்டைக்காய், வெள்ளரிக்காய் என பலவகை காய்கறிகளும் சேர்த்து புளி குழம்பு செய்யப்படுகிறது. தமிழகத்தில் பொதுவாக  மோரை மட்டும் வைத்தே மோர் குழம்பு தயார் செய்யப்படுகிறது. கேரளாவை பொறுத்த அளவில் மோருடன் வெள்ளரிக்காய், பாகற்காய் போன்ற பல காய்கறிகளை சேர்த்து இந்த புளிசேரி குழம்பு தயார் செய்யப்படுகிறது. இந்த கறியை சாதத்துடன் கலந்து தொட்டுக்கொள்ள காரசாரமான மீன்  பொரியல் அல்லது  சிக்கன் சாப்ஸ், அல்லது உருளைக்கிழங்கு வறுவல் வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.