தேவையான பொருட்கள் 


பலாக்காய் – 100 கிராம், உருளைக்கிழங்கு – 200 கிராம், வெங்காயம் – 2, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 2, பட்டை, ஏலக்காய், கிராம்பு – தலா ஒன்று, தனியாத்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தயிர் – 2 டேபிள் ஸ்பூன், இஞ்சி, பூண்டு பேஸ்ட் – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – 4 டீஸ்பூன், மல்லித்தழை, புதினா இலை – சிறிதளவு, தேங்காய்த் துருவல் – 3 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு – 4.


செய்முறை


முதலில் பலாக்காயை தோல் நீங்கி சுத்தம் செய்து துண்டு துண்டாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.


வெங்காயம் மற்றும் தக்காளியை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.


பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் குக்கரை வைத்து,  தேவையான அளவு நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். (நெய் பிடிக்காதவர்கள் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்) 


நெய் காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். 


பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.


அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கிய கொத்தமல்லி, புதினா இலைகள், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை நறுக்கி சேர்த்து நன்கு மைய வதக்க வேண்டும்.


அனைத்தும் நன்கு வதங்கியதும், வேக வைத்த உருளைக் கிழங்குகளை மசித்து இதில் சேர்த்து, மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள் உள்ளிட்ட  மசாலா வகைகளையும் சேர்த்து வதக்க வேண்டும். ( மசாலாதூள் வதக்கும் போது அடுப்பை மிதமான தீயில் வைத்துக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் மசாலா தீய்ந்து விட வாய்ப்புள்ளது)


பின்னர் தேவையான அளவிற்கு தயிர் மற்றும் உப்பு சேர்த்து குறைந்த தீயில் நன்கு வேக விட வேண்டும்.


பின்னர் காய்கறிகள் அனைத்தும் வெந்து வந்ததும் தேங்காய் மற்றும் முந்திரி பருப்புகளை சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.


அந்த கலவையை இதில் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். மசாலா வாசம் போக, காய்கறிகள் வெந்து கிரேவி பதம் வந்ததும் இறக்கி விடலாம். அவ்வளவுதான் சுவையான பலாக்காய்- உருளைக்கிழங்கு குருமா தயார்.