உணவில் தினமும் மிளகு:  ஏன் அவசியம்? எப்படி சேர்த்துக் கொள்ளலாம்?

கடந்த இரண்டு கொரோனா தொற்றுநோய் அலைகள், நோய் எதிர்ப்பு சக்திக்காக மக்களால் பரவலாக உட்கொள்ளப்படும் மூலிகைகளின் மதிப்பை நமக்கு உணர்த்தியது.

Continues below advertisement

கடந்த இரண்டு கொரோனா தொற்றுநோய் அலைகள், நோய் எதிர்ப்பு சக்திக்காக மக்களால் பரவலாக உட்கொள்ளப்படும் மூலிகைகளின் மதிப்பை நமக்கு உணர்த்தியது.

Continues below advertisement

நம் சமையலறைகளில் நீண்ட காலமாக இருந்தபோதிலும், மூலிகைகள் அடங்கிய பல ஆயுர்வேத கலவைகள் தொற்றுநோய் நம்மைத் தாக்கிய போது மட்டுமே நம் அன்றாட உணவில் ஒரு பங்காக நுழைந்தன. கதாஸ் எனப்படும் ஆயுர்வேத கலவைகளில் நமது சமையலறையில் இருக்கும் மசாலாப் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கிராம்பு, கருப்பு மிளகு, பட்டை, லவங்கம், சீரகம் மற்றும் ஏலக்காய் ஆகியவை இந்திய வீடுகளில் பொதுவாகக் காணப்படும், ஏராளமான  நன்மைகளைக் கொண்ட முக்கிய பொருட்கள் ஆகும். 

இவற்றில், முக்கியமான ஒன்று மிளகு. உங்கள் உணவில் கருப்பு மிளகு சேர்த்துக்கொள்வது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமில்லாமல் வழக்கமான வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடுவும் செய்யும். இப்படி பல நன்மைகளைக் கொண்ட மிளகை நம் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது என்பது குறித்து காண்போம்.

நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது. மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும்.

தினசரி உணவில் கருப்பு மிளகு சேர்த்துக்கொள்வது மிகவும் எளிது. தேநீர், காபி மற்றும் பிற சூடான பானங்கள் சுவை மற்றும் சுவையை அதிகரிக்க தூளாக்கப்பட்ட அல்லது முழு கருப்பு மிளகை சேர்க்கலாம். இந்திய வீடுகளில், காய்கறி மற்றும் கறி தயாரிப்புகளில் கருப்பு மிளகு சேர்க்காமல் சமைப்பது மிகவும் அரிது. சாலட் மற்றும் சூப்களில் கருப்பு மிளகு சேர்ப்பதன் மூலம் அவற்றின் நன்மைகளை அதிகரிக்கலாம்.

தமிழ்நாட்டுச் சமையலில் கருப்பு மிளகு முக்கிய பங்கு வகிக்கின்றது. தமிழ்நாட்டு உணவுகளான பொங்கல், மிளகு ரசம், மிளகுக் கோழி வருவல், முட்டை வருவல், உருளைக்கிழங்கு பொரியல் ஆகியவற்றில் சுவைகூட்டும் பொருளாக மிளகு உபயோகப்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் புகழ்பெற்ற சமையல் முறையான செட்டிநாடு சமையலில் மிளகு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சமையலில் காரச்சுவை ஊட்டுவதற்காக முற்காலத்தில் மிளகு பயன்பட்டது. 

மிளகு, வரலாற்றுக்கு முந்தைய காலம்தொட்டே இந்தியச் சமையலில் முக்கிய தாளிப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மிளகு தற்போது சிறந்து விளங்கினாலும், இந்தியாவில் உள்ள கேரளக் கடற்கரைப் பகுதி, நெடுங்காலமாகவே மிளகு உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மிளகு வணிகம் மிக லாபகரமானதாக இருப்பதனால், மிளகை 'கருப்புத் தங்கம்' என்று குறிப்பிடுகின்றனர். பண்டைக்காலத்தில் இப்பகுதியில் பணத்திற்கு பதிலாக மிளகை உபயோகப்படுத்தியதாக வரலாறு கூறுகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola