Chemmeen Biryani :சுவையான இறால் ரெசிபி... செம்மீன் பிரியாணியை ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க...

இறாலைக் கொண்டு சுவையான செம்மீன் பிரியாணி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

Continues below advertisement

தேவையான பொருட்கள் 

2 கப் பிரியாணி அரிசி, 1/2 கிலோ இறால், 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 1 கப் நறுக்கிய வெங்காயம், 1-2 வளைகுடா இலை, 6-8 கிராம்பு, 2 ஏலக்காய், 1 அங்குல இலவங்கப்பட்டை, 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு,  ருசிக்கேற்ப உப்பு, 4 தேக்கரண்டி நெய், 2 டீஸ்பூன் பிரியாணி மசாலா, 1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள், 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள், 1 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1/2 கப் நறுக்கிய கொத்தமல்லி இலைகள், 1/2 கப் நறுக்கிய புதினா இலைகள்.

Continues below advertisement

செய்முறை

1.பாதி இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி தூள், சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தேவைக்கேற்ப மற்றும்  ½ டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து, அதில் இறாலை சேர்ந்து நன்கு மசலாக்களுடன் கலக்கும்படி செய்து ஊற வைக்க வேண்டும். இதை குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும்.

2.அரிசியைக் கழுவி  ஊற வைக்க வேண்டும்.

3.ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, தாளிக்கக் கொடுத்த இறாலை சேர்த்து  வதக்க வேண்டும். வறுத்த இறாலை எடுத்து தனியாக வைக்க வேண்டும்.

4.இப்போது அதே கடாயில் நறுக்கிய வெங்காயத்தில் பாதியைச் சேர்த்து கண்ணாடிப்பதம் வரும் வரை வதக்க வேண்டும்.

5.இதனுடன் மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுது, மீதமுள்ள கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், பிரியாணி மசாலா, உப்பு, கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை சேர்க்க வேண்டும்.

6.எல்லாம் வெந்ததும், சிறிது தண்ணீர் சேர்த்து, வறுத்த இறாலை இந்த கிரேவியில் சேர்க்க வேண்டும்.

7. இதை மூடி வைத்து மேலும் 5-10 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.

8.இதற்கிடையில் மற்றொரு கடாயில் நெய், முழு மசாலா மற்றும் மீதமுள்ள வெங்காயம் சேர்த்து, சிறிது நேரம் வதக்கி, பின்னர் ஊறவைத்த அரிசியை சேர்க்க வேண்டும்.

9.தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் அல்லது அரிசி 80% வேகும் வரை கொதிக்க விடவும்.

10.இப்போது இறுதி கட்டத்திற்கு, இறால் குழம்பு, பின்னர் அரிசி, பின்னர் முந்திரி, திராட்சை, சிறிது பிரியாணி மசாலா தூவி, சிறிது நெய், கேசர் பால் ஊற்ற வேண்டும்.

11.அதை ஒரு மூடியால்  மூட வேண்டும். தம் போட்டு வேக வைக்க வேண்டும். 

12.இதை 10 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் வேக வைக்க வேண்டும். பின்னர் தீயை அணைத்து விட்டு மேலும் 10 நிமிடங்கள் அப்படியே மூடியை திறக்காமல் விட வேண்டும். இப்போது மூடியைத் திறந்தால் சுவையான செம்மீன் பிரியாணி தயார். இதை ரைத்தா உடன் சூடாக பரிமாறினால் சுவையாக இருக்கும்.

Continues below advertisement
Sponsored Links by Taboola