மனித வாழ்வில் இன்றைக்கு இருக்கும் பரபரப்பான சூழ்நிலையில் ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரமே மேலோங்கி இருக்கிறது. நீங்கள் ஏதாவது உடல்நிலை சரியில்லை என்று மருத்துவரிடம் சென்றால் பத்தில் எட்டு பேருக்கு விட்டமின் குறைபாடுகளுக்காக விட்டமின் மாத்திரைகள் அல்லது டானிக்குகளை  டாக்டர்கள் தருவார்கள். இப்படியான மாத்திரைகள் மற்றும் டானிக்கை தவிர்ப்பதற்கு நம்மிடம் இருக்கும் ஒரே மாற்று வழி கீரைகளை நமது உணவில் சேர்த்துக் கொள்வது தான்.


கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம் பொதுவாகவே கீரைகள் அதிக சக்தி கொண்ட உணவாக உள்ளது.கீரைகளின் வகைக்கேற்ப ஒவ்வொரு கீரையும் அதற்கான ஊட்டச்சத்து குணங்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு கீரையும் ஒவ்வொரு பயன் கொண்டிருப்பதுபோல் பற்களுக்கும் கீரைகளால் மிகப் பெரிய நன்மை கிடைக்கிறது.


அது என்னவெனில் ஒரு பாக்டீரியா கொல்லியாக கீரைகள் உள்ளது.கீரைகள் பற்களுக்கு ஒரு பற்பசை ஆக செயல்படுகிறது.ஆரோக்கியமான உணவுகளின் தொகுப்பில்  ஒரு பகுதியாக  இலைகளை அடிப்படையாகக் கொண்ட கீரைகளை உட்கொள்வது உங்கள் புன்னகைக்கு பயனுள்ள பலன்களை வழங்க  முடியும்.கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் வாய் ஆரோக்கியம் மேம்படும்.பற்களுக்கு கீரை ஏன் சிறந்தது என்று பல்வேறு காரணங்கள் உள்ளது.


இலை கீரைகளில் அதிக அளவு நம்மைகள் மற்றும் வைட்டமின்கள் உள்ளது. அவற்றில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளது. இது அதிக அளவில் நம்மை தரக்கூடியது. முக்கிய பயன் என்னவென்றால் பற்களில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடுவதிலும், அது வளர்வதை தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. பசலைக்கீரையில் இரும்புச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் டி ஆனது நமது தாடை மற்றும் பற்களை வலுப்படுத்த கால்சியத்துடன் சேர்ந்து மிகுந்த பலன்களை தருகிறது.


கீரையில் காணப்படும் கால்சியம்,கீரையின் நன்மைகளில் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது .நாம் கீரைகளை அதிகம் சாப்பிடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். நீங்கள் கீரைகளை சாப்பிடுவதன், மூலம் அது இயற்கையாகவே டூத் பிரஷ்ஷாக செயல்படுகிறது .இதனால் இயல்பாகவே பற்களில் உள்ள பாக்டீரியா மற்றும் உணவுத்துகள்களை வெளியேற்றுகிறது. கீரைகள் மற்றும் வைட்டமின்கள் உடலில் உள்ள தாதுக்கள் மற்றும் பல் துலக்கும் திறனுடன் அதிக நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.


இது நம் வாயில் குடியேறிய பாக்டீரியாக்களை அழித்து ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும். பச்சைக் கீரைகள் பற்சிப்பியை வலுப்படுத்துவதன் மூலம் பற்களையும் வலுப்படுத்துகிறது .இதன் மூலம் தேவையற்ற அமிலங்கள் ஆனது உருவாவது தடுக்கப்படுகிறது. இலை கீரையில் உள்ள போலிக் அமிலம் முக்கியமாக கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக அளவு பலன்களைக் கொடுக்கிறது.


இவைகள் ஈறுகள் பிரச்சனையின் காரணமாக பற்கள் விழுந்து விடுவதற்கு காரணமான பல்லுறுப்பு நோய்க்கு சிகிச்சை அளிக்கும் விதமாக இந்த நோயை தவிர்ப்பதற்கான  மெக்னீசியமானது கீரைகளில் அதிக அளவில் உள்ளது. இது அதிக அளவு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. மெக்னீசியம் கால்சியத்தை உறிஞ்சுவதால் பற்கள் அதிக அளவு வலிமை பெறுகிறது. கீரை பாக்டீரியாக்களின் கட்டமைப்பை எதிர்த்துப் போராடுவதால் ,இது அதிக ஊட்டச்சத்துகளால் நிரம்பி உள்ளது. இது ஒரு சிறந்த ஆக்சிஜனேற்றியாக உள்ளது. மற்றும் தீமைகள் உருவாவதை தடுக்கிறது .பல் வலிமை பெற கீரை ஒரு நல்ல உணவாக உள்ளது. கீரைகளை நாம் அதிக அளவு உட்கொள்ளும் பொழுது உடலில் அதிக அளவு நன்மையும் ,ஒரு புத்துணர்ச்சியும் ஏற்படுவது நாம் உணர முடியும். அனைவரும் கீரைகளை ஒரு சிற்றுண்டி உணர்வாக எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.