இந்திய விமானப்படையில் அக்னி வீர்வாயு பிரிவில் சேர வருகிற 17-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,


"அக்னிவீர்வாயு பதவிகள் இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு பதவிகளுக்கு சேர்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பதவிகளுக்கு வருகிற ஆகஸ்டு மாதம் 17-ந் தேதிக்குள் (வியாழக்கிழமை) விண்ணப்பிக்கலாம். இதில் சேர்வதற்கான வயது வரம்பு 27.6.2003 முதல் 27.12.2006 வரையிலான காலத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும்.


கல்வித் தகுதியாக கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்துடன் இடைநிலை, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு சமமான தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


 




கல்வி தகுதி 


(மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் கம்ப்யூட்டர் சயின்ஸ்) 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது இன்ஸ்டுமென்டெசன் டெக்னாலஜி, இன்பர்மேசன் டெக்னாலஜி அரசாங்க அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக் நிறுவனத்தில் இருந்து 50 சதவீதம் மதிப்பெண்களுடன் ஆங்கிலத்தில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் பெற்றிருக்க வேண்டும்.


உடற் தகுதியாக குறைந்தபட்ச உயரம் 152.5 சென்டி மீட்டர் ஆண்களும், 152 சென்டி மீட்டர் பெண்களும் பெற்றிருக்க வேண்டும். இப்பதவிகளுக்கு சம்பளமாக மாதம் ரூ.30 ஆயிரம் மற்றும் பிற சலுகைகளும் வழங்கப்படும். 2 கட்ட தேர்வு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவு ஊதிய உயர்வும் வழங்கப்படும். தேர்வுக் கட்டணமாக ரூ.250- ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் போது விண்ணப்பதாரர்கள் செலுத்த வேண்டும்.


 




தேர்வு முறை 


டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இணைய வங்கி மூலமாக பணம் செலுத்த வேண்டும். முதற்கட்ட தேர்வாக இணைய வழியில் பொதுஅறிவு மற்றும் ஆங்கிலம் சார்ந்த வினாக்கள் தேர்வும், 2-ம் கட்டமாக பொது அறிவு மற்றும் ஆங்கிலம் சார்ந்த வினாக்கள் தேர்வும், 2 தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு உடற்தகுதிகள் தேர்வும் நடைபெறும்.ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தேர்வு முறை, தேர்வுக்கு வேண்டிய ஆவணங்கள் உட்பட அனைத்து விவரங்களையும் அறிந்து உடனடியாக விண்ணப்பிக்கவும்.


மேலும் விபரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இத்தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.