தொழில் முனைவோராக மாற விருப்பம் உள்ளவர்கள் ஓராண்டு சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:


தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) மற்றும் இந்தியாவின் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (EDII) அகமதாபாத் இணைந்து ‘தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கம்’ என்ற ஓராண்டு சான்றிதழ் (One year Certificate Course on Entrepreneurship and Innovation) படிப்பைத் தொடங்கவுள்ளது.


அக்டோபர் 14 முதல் வகுப்புகள்


இந்தியாவின் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் அகமதாபாத் தொழில்முனைவோரை உருவாக்குவதில் தனக்குள்ள நெடிய அனுபவத்தினை இப்படிப்பின் பாடத்திட்டத்தினை உருவாக்குதல் மற்றும் வல்லுநர்களின் மூலம் பயிற்றுவிப்பது வழியாக பகிர்ந்தளிக்கிறது. இதற்கான வகுப்புகள் வரும் அக்டோபர் 14, 2024 அன்று தொடங்க உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் இணையம் மூலம் https://oneyearcourse.editn.in/management/form/admissions/ வரவேறகப்படுகின்றன. இந்த பாடத்திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.80,000 கட்டணமாக அரசு நிர்ணயித்துள்ளது.


யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?


21 வயது முதல் 40 வயதுக்குட் உபட்ட பட்டதாரிகள் மற்றும் ஐ.டி.ஐ பிரிவுகளில் தொழிற்பயிற்சி முடித்தவர்கள் இந்த பயிற்சியில் சேரத் தகுதி உடையவர்கள் ஆவர். இது ஒரு தொழில்முனைவோர் சான்றிதழ் படிப்பாகும். எனவே, தொழில்முனைவோராக மாற முயற்சிக்கும் ஒவ்வொரு ஆர்வலர்களுக்கும் இது ஓர் அரிய வாய்ப்பு ஆகும்.


பயிற்சியின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?


 சிறந்த பாடத்திட்டம், நவீன நூலகங்கள், அனுபவமிக்க பயிற்றுநர்கள், நவீன தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆகியவை இப்பயிற்சியின் சிறப்பம்சங்கள் ஆகும்.


 மேலும், விவரங்களுக்கு www.editn.in என்ற இணையதளத்திலும் மற்றும் 8668101638 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிப்பது எப்படி?


https://oneyearcourse.editn.in/management/form/admissions/ என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.


தொலைபேசி எண்கள்: 8668101638, 8668107552


கூடுதல் தகவல்களுக்கு: https://oneyearcourse.editn.in/