விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் குறித்து அறிவிப்பினை அம்மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிக்காட்டுதல் மையம் வெளியிட்டுள்ளது. 


ஓசூரை தலமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் பிரபல டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமும் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையமும் இணைந்து நடந்தும் இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வரும் 22 ஆம் தேதி விருதுநகரில் நடைபெறுகிறது.


பணி விவரம்:


இளநிலை தொழில் நிபுணர்கள்


பணியிடம்:



ஓசூரில் உள்ள டாடா நிறுவனம்


கல்வித் தகுதி:


இதில் பங்கேற்க  விரும்புவோர் அரசு அங்கீகாரத்துடன் 2020,2021,2022-ம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:


மாதாந்திர ஆரம்ப சம்பளமாக ரூ 16,557  மற்றும் போனஸ் வழங்கப்படும்.


பணியாளர்க்கான நலத்திட்டங்கள்: நிரந்தர வேலை வாய்ப்பு. வேறு ஒப்பந்தமோ, பத்திரமோ இல்லை.


நம்பிக்கைக்குகந்த மற்றும் பாதுகாப்பான பணிச்சூழல்


தேலையான வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான தங்குமிடங்கள்


ஒழுங்குமுறைச் சட்டங்களுக்குட்பட்ட அனைத்து" நலத்திட்டங்கள் (PF/Gratuity/ESI போன்றவை) வழங்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கவனிக்க..


இலவச தங்குமிடம் வழங்கப்படுகிறது.


டாடா எலக்ட்ரானிக்ஸ் இந்த வேலை வாய்ப்புகளுக்கு எந்த விதமான கட்டணத்தையும் வசூலிப்பதில்லை.


சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள் - 22.11.2022 காலை 10 மணி முதல்


சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்: ஐ.ஐ.டி. வளாகம், சூலக்கரை


ஐ.ஐ.டி. வளாக முகவரி - https://goo.gl/maps/sru5WSp79QzjgFdV9