நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே துறையில் சப்- இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள், ரயில்வே பாதுகாப்பு துறை, ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை ஆகிய பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது. 

பணி விவரம்

Sub-Inspectors (Exe.) - 250

Constables (Exe.) - 2000

இரயில்வே பாதுகாப்பு படை ( Railway Protection Force (RPF)) ,இரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை ( Railway Protection Special Force (RPSF)) இரண்டு பிரிவுகளில் தகுதியானவர்கள் 

மொத்த பணியிடங்கள் - 2,250

கல்வித் தகுதி:

  • உதவி ஆய்வாளர் (சப்-இன்ஸ்பெக்டர்) பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  
  • கான்ஸ்டபிள் பணிக்கு 10-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • பள்ளியில் 10+12 -வது என்ற முறையில் படித்திருக்க வேண்டும். 
  • அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு காலிப் பணியிடங்களில் 10 சதவீதமும், பெண்களுக்கு 15 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

வயது வரம்பு 

  • சப்-இன்ஸ்பெக்டர் (எக்ஸியூடிவ்) பணிக்கு விண்ணப்பிக்க 20 வயது பூர்த்தியடைந்தவராகவும் 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 
  • கான்ஸ்டபிள் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது குறித்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தெரிவு செய்யும் முறை

இதற்கு விண்ணப்பித்தவர்கள் மூன்று தகுதித் தேர்வுகளின் அடிப்படையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். கம்யூட்டர் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

கம்யூட்டர் தகுதித் தேர்வு பாடத்திட்டம்

உடற்தகுதித் தேர்வு பாடத்திட்டம்

PET தேர்வு பாடத்திட்டம்

 

விண்ணப்ப கட்டணம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு மையங்கள் உள்ளிட்ட தகவல்கள் குறித்த முழு விவரங்களை https://indianrailways.gov.in - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்