யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், மத்திய ஆயுதக் காவல் படைகளில் (CAPF) காலியாக உள்ள உதவி கமாண்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான 2026 ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

இந்த அறிவிக்கையின்கீழ் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (CISF), இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) மற்றும் சசாஸ்த்ரா சீமா பால் (SSB) ஆகிய ஐந்து பிரிவுகளில் மொத்தம் 349 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

காலிப் பணியிட விவரங்கள்

மொத்தமுள்ள 349 பணியிடங்களில், பிஎஸ்எஃப்பில் 108 இடங்களும், சிஆர்பிஎஃப்பில் 106 இடங்களும், சிஐஎஸ்எஃப்பில் 70 இடங்களும், எஸ்எஸ்பியில் 53 இடங்களும், ஐடிபிபியில் 12 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

முக்கிய தேதிகள்

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் மார்ச் 12ஆம் தேதி மாலை 6 மணி வரை ஆகும். எழுத்துத் தேர்வு ஜூலை 19, 2026 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி என்ன?

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பைப் பொறுத்தவரை, ஆகஸ்ட் 1, 2026 தேதியின்படி விண்ணப்பதாரர் 20 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு (PET) மற்றும் மருத்துவப் பரிசோதனை, மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விருப்பமுள்ளவர்கள் upsconline.nic.in அல்லது upsc.gov.in என்ற இணையதளம் மூலம் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

https://upsconline.nic.in/exam-apply என்ற பக்கத்தில் இதற்கான அறிவிக்கையைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க முன்னதாகவே விண்ணப்பிக்குமாறு யுபிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.