TNPSC Group4 Exam: உடனே கிளம்புங்க! தமிழ்நாடு முழுவதும் இன்னும் சற்று நேரத்தில் குரூப் 4 தேர்வு தொடக்கம்

TNPSC Group4 Exam:டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான புதிய விதிமுறைகள் பற்றிய விவரத்தை காணலாம்.

Continues below advertisement

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பணிகளுக்கான 6,244 காலி இடங்களுக்கு நடத்தப்படும் தேர்வு இன்று(09.06.2024) நடைபெற இருக்கிறது. 

Continues below advertisement

குரூப் 4 தேர்வு 

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை வன காப்பாளர், வன கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கான இடங்களும் இதிலேயே சேர்க்கப்பட்டுள்ளன. இந்த முறை பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10-வது தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளநிலை உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தனர். கடந்த மே 27-ம் தேதி இதற்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது. 

 தேர்வர்களுக்கான முக்கிய அறிவுரை

  • விண்ணப்பதாரர்கள் காலை 8.30 மணிக்கு முன்னரே தேர்வுக்கூடத்திற்கு அனுமதிச்சீட்டு உடன் வருகைதர வேண்டும்.
  • காலை 09.00 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • மேலும், 12.45 மணிக்கு தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதி கிடையாது.
  • தேர்வு எழுதும் அறைக்குள் செல்போன் மற்றும் மின்னணு கடிகாரம், புளூடூத் சாதனங்கள் போன்ற மின்னணு உபயோகப் பொருட்கள் எடுத்து செல்ல அனுமதி இல்லை.
  • தேர்வு மையத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே வருவது கூடுதல் சிறப்பு என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
  • ஆள்மாறாட்டம் மற்றும் தேர்வு கூடத்திற்குள் அல்லது வெளியே விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட எந்தவித முறைகேட்டிலும் ஈடுபடும் பட்சத்தில் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன், தேர்வாணையத்தால் தக்கதென கருதப்படும் காலம் வரையில் தேர்வு எழுதுவதிலிருந்து தேர்வர்கள் விலக்கி வைக்கப்படுவர்.
  • தேர்வர்கள் ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை தேர்வு எழுதும்போது கொண்டு வர வேண்டும்‌.

இவ்வாறு டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள புதிய அறிவுறுத்தல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola