நாமக்கல் நரசிம்ம சுவாமி திருக்கோயிலில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான தகுதிகள் என்னென்ன என்று காணலாம்.


பணி விவரம்:



  • தமிழ் ஆசிரியர்

  • ஆகம ஆசிரியர்

  • விடுதி காப்பாளர் 

  • அலுவலக உதவியாளர் (பள்ளி)

  • அலுவலக உதவியாளர் (விடுதி)

  • சமையலர் 

  • தூய்மை பணியாளர் 


கல்வித் தகுதி 



  • தமிழ் ஆசியர் பணிக்கு பி.டெக். பட்டம் படித்திருக்க வேண்டும். 

  • வைணவ ஆகமன் ஓராண்டு பயிற்சி நிறைவு செய்ததற்கான சான்றிதழ் இருக்க வேண்டும்.

  • விடுதி காப்பாளர் பணியிடத்திற்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

  • அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  • தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

  • சமையலர் பணிக்கு உணவு தயாரிக்க டெஹ்ரிந்திருக்க வேண்டும். 

  • தூய்மை பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:



  • தமிழ் ஆசிரியர் - ரூ.20,600 - ரூ.65,500

  • ஆகம ஆசிரியர் - ரூ.20,600 - ரூ.65,000

  • விடுதி காப்பாளர்- ரூ.20,600 - ரூ.65,500

  • அலுவலக உதவியாளர் (பள்ளி) - ரூ.11,600 - ரூ.36,800

  • அலுவலக உதவியாளர் (விடுதி) - ரூ.11,600 - ரூ.36,800

  • சமையலர் - ரூ.11,600 -ரூ.36,800

  • தூய்மை பணியாளர் - ரூ.11,600 -ரூ.36,800


வயது வரம்பு


இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 1-அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 


தேர்வு செய்யப்படும் முறை:


இந்தப் பணிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 


விண்ணப்பிக்கும் முறை:


பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய தகுதிச்சான்றுகளுடன் நேரடியாகவோ தபால் மூலமாகவோ கோயில் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:


உதவி ஆணையர் /செயல் அலுவலகர், 


அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில்,
நாமக்கல் - 637001


விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.08.2023


******


தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை மாநகர சமூக பாதுகாப்பு பிரிவில் உள்ள பல்வேறு வேலை வாய்ப்புகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்:


Programme Officer - PO 


Assistant cum Data Entry Operator - DEO 


கல்வித் தகுதி:



  • PO பணியிடத்திற்கு விண்ணப்பிக்க Social Work /Sociology/ Child Development/Human Rights Public Administration/ Psychology/ Psychiatry/ Law/ Public Health / Community Resource Management உள்ளிட்ட இந்த ஏதேனும் துறையில் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

  • இளங்கலை படித்தவர் என்றால் Social Work /Sociology/ Child Development/ Human Rights Public Administration/ Psychology/ Psychiatry/ Law/ Public Health / Community Resource Management இந்த துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, இரண்டு ஆண்டுகால பணி அனுபவம் இருக்க வேண்டும். 

  • DEO  பணிக்கு விண்ணப்பிக்க +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். அரசு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் ஓராண்டு காலம் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.


வயது வரம்பு


PO பதவிக்கு 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் 


DEO - 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 


ஊதிய விவரம்: 


Programme Officer - PO - ரூ.34,755/-


Assistant cum Data Entry Operator - DEO -ரூ.13,240/-


தேர்வு செய்யப்படுவது எப்படி?


இதற்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். 


விண்ணப்பிப்பது எப்படி?


இதற்கு விண்ணப்பிக்க https://urxl.com/SCPS2023 - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும். தொடர்புக்கு - recruitmentscps@gmail.com


விண்ணப்பிக்க கடைசி தேதி - 20.08.2023 மாலை 5.30 வரை 


இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://cms.tn.gov.in/sites/default/files/announcement/2023_TNSCPS_vacant_recruitment.pdf - என்ற இணைப்பை களிக் செய்து காணவும்.