EMRS Recruitment 2023:  பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகலவ்யா  மாதிரி உறைவிட பள்ளிகளில் ((Eklavya Model Residential Schools) காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர், விடுதி பொறுப்பாளர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பிக்க இன்றிரவு வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கடைசி நேரம் வரை காத்திருக்காமல் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


பணியிட விவரம்:


ஆசிரியர்கள்



  • இந்தி - 606

  • ஆங்கிலம் - 671

  • கணிதம் - 686

  • சமூக அறிவியல் - 670

  • மூன்றாவது மொழி - 652

  • இசை - 320

  • கலை -342 

  • உடற்கல்வி - 321

  • உடற்கல்வி பெண் - 345

  • நூலகர் - 369

  • விடுதி காப்பாளர் - (ஆண்) 335 

  • விடுதி காப்பாளர் பெண் - 334



மொத்த பணியிடங்கள் - 6,329


ஊதிய விவரம்:



  • TGT - லெவல் 7 ரூ.44,900- 1,42,400

  • TGT - Miscellanrous - லெவல் 6 ரூ.35,400 - 1,12,400

  • விடுதி காப்பாளர் - லெவல் 5 ரூ.29,200 - 92,300


கல்வித் தகுதி:


இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து முதுகலை பட்டம் படித்திருக்க வேண்டும். பி.எட். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


PGT - ஆசிரியர்கள் பணிக்கு ஆங்கிலம், இந்தி, கணிதம், ஆகிய பிரிவுகளில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


விண்ணப்பக் கட்டணம் 


 ரூ- 2000/- முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு ரூ. 1500/- ஆசிரியர் அல்லாத இதர அனைத்து பதவிகளுக்கும் ரூ.1000/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும், 


தேர்வு செய்யப்படும் முறை:


எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு முறை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பம் செய்வது எப்படி?  


www.emrs.tribal.gov.in -என்ற இணையதள பக்கத்தில் மட்டுமே விண்ணப்பங்கள் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏகல்வ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளி:


பழங்குடியின மாணவர்களுக்காக 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான குடியிருப்புப் பள்ளிகளை அமைப்பதற்காக இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 275 (1)-ன் கீழ் மத்திய அரசு நிதியை வெளியிட்டு வருகிறது.


2018-19ம் ஆண்டு இதற்கென தனித் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ், 50 சதவீதத்திற்கு மேல் பழங்குடியின மக்கள் தொகை உள்ள வட்டங்களிலும், அல்லது குறைந்தபட்சம் 20 ஆயிரம் பழங்குடியினர் உள்ள ஒவ்வொரு வட்டத்திற்கும் ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளை அமைக்க கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.


 நாடு முழுவதும் 740 வட்டங்கள் கண்டறியப்பட்டன. தற்போது வரை, நாடு முழுவதும் 394 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 1,05,463 பழங்குடியின மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.


 




விண்ணப்பிக்க கடைசி தேதி - 18.08.2023