தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் உள்ள வட்டார கல்வி அலுவலர் ( Block Educational Officer) பணிக்கான  தேர்வுக்கு இன்று (06.06.2023) முதல் விண்ணப்பிக்கலாம் என்று  ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நேரடி நியமனமாக உள்ள இந்தத் தேர்வுக்கு தேர்வர்கள் ஜூலை 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பணி விவரம்:


வட்டார கல்வி அலுவலர் ( Block Educational Officer)


கல்வித் தகுதி:


இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க யு.ஜி.சி. அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பி.எட். அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம், வேதியியல், இயற்பியல், உயிரியல், விலங்கியல், வரலாறு, புவியியல் ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.


வயது வரம்பு:


இதற்கு விண்ணப்பிக்க 01.07.2023 -ன் படி 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு இடஒதுக்கீடு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை அறிவிப்பில் காணவும்.


தேர்வு கட்டணம்:


இதற்கு விண்ணப்பிக்க தேர்வுக் கட்டணமாக ரூ. 600 செலுத்த வேண்டும். பழங்குடியினர் / பட்டியலின பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மட்டும் ரூ.300-ஐ விண்ணப்பக்  கட்டணமாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு முறை:


 




 




 


 


 



இந்த தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்து https://www.trb.tn.gov.in/- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


அரசுக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கான ஆசிரியர் பணிக்கு, போட்டித் தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்தத் தேர்வுகளை டி.ஆர்.பி. எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. 


தேர்வர்கள் https://www.trb.tn.gov.in/என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து, வட்டார கல்வி அலுவலர் பணிக்கான  தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். நேரடி நியமனமாக உள்ள இந்தத் தேர்வுக்கு தேர்வர்கள் ஜூலை 5-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 


இது தொடர்பான முழு விவரத்திற்கு https://trb.tn.gov.in/admin/pdf/1487356732BEO%20NOTIFICATION%20MERGED%2005.06.2023.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


இணைய வழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்: 06-06-2023 முதல் 05.07.2023  வரை