நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே துறையில் சப்- இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள், ரயில்வே பாதுகாப்பு துறை, ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை ஆகிய பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது. 


பணி விவரம்


Sub-Inspectors (Exe.) - 250


Constables (Exe.) - 2000


இரயில்வே பாதுகாப்பு படை ( Railway Protection Force (RPF)) ,இரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை ( Railway Protection Special Force (RPSF)) இரண்டு பிரிவுகளில் தகுதியானவர்கள் 


மொத்த பணியிடங்கள் - 2,250


கல்வித் தகுதி:



  • உதவி ஆய்வாளர் (சப்-இன்ஸ்பெக்டர்) பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  

  • கான்ஸ்டபிள் பணிக்கு 10-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  • பள்ளியில் 10+12 -வது என்ற முறையில் படித்திருக்க வேண்டும். 

  • அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு காலிப் பணியிடங்களில் 10 சதவீதமும், பெண்களுக்கு 15 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளது. 


வயது வரம்பு 



  • சப்-இன்ஸ்பெக்டர் (எக்ஸியூடிவ்) பணிக்கு விண்ணப்பிக்க 20 வயது பூர்த்தியடைந்தவராகவும் 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

  • கான்ஸ்டபிள் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது குறித்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


தெரிவு செய்யும் முறை


இதற்கு விண்ணப்பித்தவர்கள் மூன்று தகுதித் தேர்வுகளின் அடிப்படையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். கம்யூட்டர் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை


https://indianrailways.gov.in - என்ற இணைப்பை க்ளிக் செய்து தேவையான ஆவணங்கள், விவரங்களை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.


கம்யூட்டர் தகுதித் தேர்வு பாடத்திட்டம்





உடற்தகுதித் தேர்வு பாடத்திட்டம்




PET தேர்வு பாடத்திட்டம்



விண்ணப்பிக்க கடைசி தேதி, விண்ணப்ப கட்டணம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு மையங்கள் உள்ளிட்ட தகவல்கள் குறித்த முழு விவரங்களை https://drive.google.com/file/d/1CThP9krZT6j_DMhqW8JIddMuu4ZBePok/preview - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


ரயில்வேயில் 9,000 பணியிடங்கள்


நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே துறையில் தொழில்நுட்ப பிரிவிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது. 




இந்திய ரயில்வே துறையில் அசிஸ்டெண்ட் லோக்கோ பைலட் (Assitant Loco Pilot) பணியிடங்கள் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. மேலும், புதிதாக 9 ஆயிரம் பணியிடங்கள் வரை நிரப்பட உள்ளதாகவும் அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் (CEN No.02/2024) வெளியிடப்பட்டுள்ள விவரங்களை காணலாம்.



பணி விவரம்


அசிஸ்டெண்ட் லோக்கோ பைலட் (Assitant Loco Pilot ) 


கல்வி மற்றும் பிற தகுதிகள் 



  • இதற்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஃபிட்டர், எலக்ட்ரீசியன், ஹீட் இஞ்சின், மெக்கானிக் உள்ளிட்ட பிரிவுகளில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


விண்ணப்ப கட்டணம்




 


ஊதிய விவரம்


இதற்கு தொடக்க ஊதியமாக ரூ.19,900 வழங்கப்படும்.


தெரிவு செய்யப்படும் முறை 


ரயில்வே வாரியத்தின் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களின் Certificate Verification முடித்தவுடன், Computer Based Test மூலம் தேர்வு தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிப்பது எப்படி?


https://www.rrbchennai.gov.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 


ஆன்லைன் கணினி தேர்வு பாடத்திட்டம்




விண்ணப்பிக்க கடைசி நாள் - 19.02.2024  23.59 மணி வரை 


இந்திய கடலோர காவல் படையில் (Indian Coast Guard)  காலியாக உள்ள’ Navik’ (General Duty)  பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 260 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் வாசிக்க..