ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 122 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? வாங்க பார்ப்போம்.
பொதுத்துறை வங்கி பணி எதிர்பார்ப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு அமைந்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக 122 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்பட தொடங்கி இருக்காங்க.
மேனேஜர், டெபுடி மேனேஜர் ஆகிய பதவிகளில் மொத்தம் 122 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. டிஜிட்டல் பிளாட்பார்ம், கிரெட்டிட் அனலிஸ்ட் ஆகிய பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பட்டப்படிப்பு முடித்தவர்கள், பொறியியல் படிப்பு, எம்பிஏ முடித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பாக உள்ளது.
மேனேஜர் (Credit Analyst) 63மேனேஜர் (Products – Digital Platforms) 34டெபுடி மேனேஜர் (Products – Digital Platforms) 59என மொத்தம் 122 காலி பணியிடங்களை நிரப்ப இருக்காங்க.
கிரெட்டிட் அனலிஸ்ட் பிரிவில் உள்ள மேனேஜர் பதவிக்கு ஆகஸ்ட் 31 தேதியின்படி, குறைந்தபட்சம் 25 முதல் அதிகபடியாக 35 வரை இருக்கலாம்.
டிஜிட்டல் பிளாட்பார்ம் பிரிவில் மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 28 முதல் 35 வயது வரையும், டெபுடி மேனேஜர் பதவிக்கு 25 முதல் 32 வயது வரையும் இருக்க வேண்டும். வயது வரம்பில் ஒபிசி, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்வு உள்ளது.
கிரெட்டிட் அனலிஸ்ட் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு மற்றும் நிதி பிரிவில் எம்பிஏ, PGDBA / PGDBM/ MMS/ CA/ CFA/ ICWA ஆகியவை முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 வருடம் அனுபவம் எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் பிளாட்பார்ம் பிரிவில் உள்ள பதவிகளுக்கு ஐடி, கணினி அறிவியல், எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ரூமெண்டேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன் ஆகியவற்றில் B.E. / B. Tech அல்லது கணினி பயன்பாட்டில் முதுகலை பட்டப்படிப்பு (MCA) ஆகியவற்றை 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்பிஏ படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும், மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 5 வருடமும், டெபுடி மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 3 வருடமும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேனேஜர் பதவிக்கு ரூ.85,920 முதல் அதிகபடியாக ரூ.1,05,280 வழங்கப்படும். டெபுடி மேனேஜர் பதவிக்கு ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை சம்பளம் வழங்கப்படும்.
எஸ்பிஐ வங்கியில் உள்ள மேனேஜர் மற்றும் டெபுடி மேனேஜர் பதவிகளுக்கு தேர்வு கிடையாது. விண்ணப்பதாரர்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யபப்படுவார்கள். அவர்களுக்கு 100 மதிப்பெண்களுடன் நேர்காணல் நடைபெறும். அதில் தேர்ச்சி பெறும் நபர்களின் மெரிட் பட்டியல் வெளியிடப்படும். நேர்காணலுக்கான அழைப்பு இமெயில் மூலம் அனுப்பப்படும். மேலும், இணையதளத்தில் வெளியிடப்படும்.
இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க விரும்பவர்கள் https://sbi.bank.in/web/careers/current-openings என்ற இணையதளத்தில் இமெயில் ஐடி மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். தொடர்ந்து ரூ.750 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் விலக்கு அளிக்கப்படுகிறது. தேவையான ஆவணங்கள் மற்றும் கையொப்பத்தை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான அறிவிப்பு கடந்த 9-ம் தேதி தொடங்கிய நிலையில் வரும் அக்டோபர் 2-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே உடனே உங்கள் விண்ணப்பத்தை இன்றே அனுப்பிடுங்கள்.