மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘Sashastra Seema Bal’ என்ற அழைக்கப்படும் எல்லைப் பாதுகாப்பு படையில் உள்ள தலைமை கான்ஸ்டபிள் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பி அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 

பணி விவரம்:

 

Head Constable (Electrician)- 15

 

Head Constable (Mechanic) only for male - 296

 

Head Constable (Steward) -2

 

Head Constable (Veterinary) -  23

 

Head Constable (Commn) - 578

 

 

மொத்த பணியிடங்கள் - 914

 

கல்வி மற்றும் பிற அடிப்படை தகுதிகள்:

 

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு அல்லது +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

 

சம்பந்தப்பட்ட துறையில் ஐ.டி.ஐ. டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

மெக்கானிக் பணிக்கு கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

 

இரண்டு ஆண்டுகள் குறைந்தபட்சம் பணி அனுபவம் இருக்க வேண்டும். 

 

விலங்கியல் நிபுணர் பணிக்கு Veterinary and Livestock Development or Veterinary Stock Assistant Course or Animal Husbandry Course ஆகிய துறைகளில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

 

ஊதிய விவரம்:

 

இதற்கு ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.

 

வயது வரம்பு:

 

இதற்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

 

தேர்வு செய்யப்படும் முறை?

 

உடற்தகுதித் தேர்வு (Physical Efficiency Test, Physical Standard Test (PST)), எழுத்துத் தேர்வு, திறனறவுத் தேர்வு/ ட்ரேட் டெஸ்ட், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

 

விண்ணப்பக் கட்டணம்:

 

இதற்கு விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். பட்டியலின / பழங்குடியின பிரிவினர், முன்னாள் இராணுவ அலுவலார்கள், பெண்கள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

விண்ணப்பிப்பது எப்படி?

 

http://www.ssbrectt.gov.in/ - என்ற இணையதளத்தை க்ளிக் செய்து ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 18.06.2023

 

இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு தொடர்பான முழு விவரங்களை http://www.ssbrectt.gov.in/- என்ற லின்கை க்ளிக் செய்து காணலாம்.