இந்திய ரிசர்வ் வங்கியில் (RESERVE BANK OF INDIA) காலியாக உள்ள 291 கிரேட்-பி (Grade- B) அலுவலர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் உள்ளிட்ட தகவல்கள் குறித்த விவரத்தை இங்கே காணலாம்.


பணி விவரம்:


Officers in Grade ‘B’(DR)- General


Officers in Grade ‘B’(DR)- DEPR
 
Officers in Grade ‘B’(DR)- DSIM


கல்வி மற்றும் பிற தகுதிகள்:



  • Officers in Grade 'B' (DR) - (General) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

  • Grade 'B' (DR) பிரிவிற்கு விண்ணப்பிக்க வணிகவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Business Economics, Agricultural Economics, Industrial
    Economics ஆகிய துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

  • Grade 'B' (DR) - DSIM பணிக்கு விண்ணப்பிக்க Statistics/ Mathematical Statistics/ Mathematical
    Economics/ Econometrics/ Statistics & Informatics/ Applied Statistics & Informatics போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

  • அதோடு, 55 சதவீதம் முதல் 60 சதவீதம் வரையிலான மதிப்பெண் எடுத்து தேர்சி பெற்றிருக்க வேண்டும். 

  • இதற்கு விண்ணப்பிக்க மற்ற என்னென்ன கல்வித் தகுதிகள் வேண்டும் என்பது குறித்து அறிவிப்பில் விரிவாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 

  • இந்த பணிக்காக பொறுப்புகள் குறித்த முழு விவரத்திற்கு https://opportunities.rbi.org.in/scripts/roles.aspx- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


வயது வரம்பு:


இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 21 வயது பூர்த்தியடைந்தவராகவும், 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:


கிரேட்-பி - பணிக்கு வழங்கப்படும் மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விண்ணப்பக் கட்டணம்: 


இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.850 ஆகும் (கூடுதலாக 18% ஜிஎஸ்டி வரி). பட்டியலின /   பழங்குடியின பிரிவினர், மாற்றுத் திறனாளி விண்ணப்பித்தாரர் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
 
ஏற்கனவே ரிசர்வ் வங்கியில் அலுவலராக உள்ளவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 


தேர்வு செய்யப்படுவது எப்படி?


இதற்கு தகுதியானவர்கள் ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு, நேர்காணல் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.


தேர்வு மையங்கள்:


தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல், திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்கள் விவரங்களை அறிவிப்பில் காணவும்.


விண்ணப்பம் செய்வது எப்படி? 


விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் https://www.rbi.org.in/- மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 


ஆன்லைனில் விண்ணப்பிக்க https://ibpsonline.ibps.in/rbioapr23/-என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


தேர்வு நடைபெறும் தேதிகள்:




விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 09-06-2023 (23:00)


இது தொடர்பான கூடுதல் விவரங்களை  https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/DADVTGRB09052023FA65E4FB1C2CF473396B4FD7E5F69CDDE.PDF - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.’