Job Alert: தேர்வு எதுவும் இல்லை; வேலூரில் வேலை- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம்!

Job Alert: வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிவ விவரங்களை காணலாம்.

Continues below advertisement

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre Recruitment) திட்டத்தில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

Continues below advertisement

பணி விவரம்:

  • வழக்கு பணியாளர் (Case Worker)
  • பல்நோக்கு உதவியாளர்
  • பாதுகாவலர்

ஒருங்கிணைந்த சேவை மையம்

பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பல்வேறு மகளிர் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC), பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தொகுப்பூதிய / ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்க்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வேலூரைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் பிற தகுதிகள்

  • வழக்கு பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க ’Social Work, Counselling Psycology or Development Management ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • உளவியல் ஆலோசகர் (Counselling Psychology) அல்லது மேலாண்மை வளர்ச்சியில் (Development Management) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் ஓர் ஆண்டு பணி முன் அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்த பட்சம் ஓராண்டு அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும்.
  • பன்முக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். சமையல் தெரிந்திருக்க வேண்டும். வேலூரைச் சேர்ந்த பெண்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • பாதுகாப்புப் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய அனுபவம் மற்றும் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம்:

  • வழக்கு அலுவலர்கள் - ரூ.18,000
  • பாதுகாவலர் - ரூ.12,000
  • பன்முக உதவியாளர்- ரூ.10,000

வயது வரம்பு:

இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படுவது எப்படி?

இந்த வேலைக்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த பதவிகளுக்கு உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அலுவலகத்தில் நேரிடையாக விண்ணப்பங்களைச் சமர்பிக்க வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

மாவட்ட சமூக நல அலுவலகம்,
4-வது மாடி, 'B' பிளாக்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
சத்துவாச்சாரி,
வேலூர் - 600 009

https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2024/06/2024061175.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து பணியிட எண்ணிக்கை, வேலைவாய்ப்பு அறிவிப்பின் முழு விவரத்தை காணலாம்.

https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2024/06/2024061197.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் - 20.06.2024 மாலை 5 மணிக்குள்


 

Continues below advertisement
Sponsored Links by Taboola