திருநெல்வேலியில் உள்ள சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலகத்தில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மகளிர் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC)


பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம்  வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணிநேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.


அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC), பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.


இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தொகுப்பூதிய / ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பணி விவரம்:


வழக்கு பணியாளர் (Case Worker) -6 


ஐ.டி. ஊழியர்


கல்வி மற்றும் பிற தகுதிகள்


சமூகப்பணி, ஆலோசனை உளவியல் அல்லது மனிதவள மேலாண்மையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


சட்டம் (Master in Law)/ சமூகப்பணி (Master in Social Work) / சமூகவியல் (Sociology) / சமூக அறிவியல் (Social Science) உளவியல் (Psycology) போன்றவற்றில் முதுகலைப் பட்டம் (Master Degree) பெற்றிருக்க வேண்டும்.


சமூக பணியில் இளங்கலைப் பட்டம் (BSW), சமூகவியல் (B.A.Sociology), சமூக அறிவியலில் இளங்கலைப் பட்டம் (B.A Social Science), உளவியல் (B.Sc Psychology), சட்டம் (B.L) போன்ற கல்வி தகுதியை கொண்டிருக்க வேண்டும்.


ஐ.டி. பணியிடத்திற்கு கம்யூட்டர் சயின்ஸ் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும். 


ஒரு ஆண்டு தொண்டு நிறுவனங்கள், அரசு சார்ந்த திட்டங்களில் பணி புரிந்தவராகவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஒருவருடம் ஆலோசனை வழங்குவதில் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


உள்ளூரில் வசிக்கும் பெண்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  திருநெல்வேலியைச் சேர்ந்த பெண்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஊதிய விவரம்:


வழக்கு பணியாளர் (Case Worker) - ரூ.15,000


ஐ.டி. ஊழியர் - ரூ.18,000


தேர்வு செய்யப்படுவது எப்படி?


இந்த வேலைவாய்ப்பிற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிப்பது எப்படி?


இந்த பதவிகளுக்கு உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அலுவலகத்தில் நேரிடையாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். 


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:


மாவட்ட சமூக நல அலுவலகம்
பி4/107, சுப்பிரமணியபுரம் தெரு,
வ.உ.சி. மைதானம் எதிரில், 
திருவனந்தபுரம் ரோடு,
பாளையங்கோட்டை,
திருநெல்வேலி - 627002


விண்ணப்பிக்க கடைசி நாள் - 14.10.2023


இதற்கு விண்ணப்பிக்க https://forms.zohopublic.in/collrtnv/form/CaseWorker/formperma/gZouystkAj4dKVA10tBAgBVaHq1vedpxdRDp6L05m8Mhttps://forms.zohopublic.in/collrtnv/form/ITStaff/formperma/Zq_hbom54LBnk0QNTifNEEF6doBXx2uwbPEA4YWTjgs - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


https://tirunelveli.nic.in/notice_category/recruitment/- என்ற இணைப்பை க்ளிக் செய்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றிய விவரங்களை காணலாம்.