தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கோ. லிமிடெட் என்பது நிதி அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு இந்திய பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனமாகும். மும்பையை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

Continues below advertisement


இத்தேர்வை பலரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இந்நிறுவனத்தில் பிரிவு 3 பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டிருந்தது. அதில் 300 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்கி ( பிப்ரவரி 15 ஆம் தேதி )  நாளையுடன் நிறைவடைகிறது.  நாளை கடைசி நாள் என்பதால், வலைதளம்  வேகமாக இயங்குமா என்பதை உறுதியாக கூற இயலாது. எனவே உடனடியாக விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பிக்கவும்.




Also Read: KVB Recruitment:டிகிரி முடித்தவரா?பிரபல வங்கியில் வேலை;விண்ணப்பிப்பது எப்படி?- முழு விவரம்!


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: 


தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கோ. லிமிடெட் என்பது நிதி அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு இந்திய பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனமாகும். மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.



  • www.newindia.co.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.

  • வலைத்தளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள  Quick Opportunities என்பதை கிளிக் செய்யவும்.

  • பின்னர் Recruitment section-ல் உள்ள dropdown menu என்பதை கிளிக் செய்யவும்

  • NIACL Assistant என்ற லிங்க்கை கிளிக் செய்து New Registration என்பதை கிளிக் செய்யவும்

  • கேட்கப்பட்டுள்ள பெயர், இ-மெயில் முகவரி, கைபேசி எண் உள்ளிட்ட தகவலை பதிவு செய்யவும்.

  • புகைப்படம், கையொப்பம், இடது கை கட்டை விரல் ரேகை தேவையான ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும் வாசிக்க

  • அடுத்ததாக ரூ. 850 கட்டணம் ( எஸ்.சி & எஸ்.டி பிரிவினருக்கு ரூ.100  செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.


இந்த பணிக்கான தேர்வு முறையானது, இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டமானது வருகின்ற மார்ச் 1-ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமானது பின்னர் தெரிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Also Read: Job Fair: வரும் 16-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்; எங்கே? எப்போது? - முழு விவரம்!