தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ( National Institute of Technical Teachers’ Training and Research) உள்ள பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்:


MTS- Multi Tasking Staff -34


கல்வி மற்றும் பிற தகுதிகள்:



  • இதற்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  • அரசு அல்லது அரசு சாரா நிறுவனத்தில் ஓராண்டு பணியாற்றிய அன்பவம் இருக்க வேண்டும். 

  • கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

  • வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

  • ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 

  • அலுவலக பணிகளை செய்ய வேண்டும்.

  • தோட்ட வேலைகள் செய்ய வேண்டும். 

  • உயரதிகாரிகள் கொடுக்கும் வேலைகளை செய்ய  வேண்டியிருக்கும். 


பணியிடம்:


சென்னை


வயது வரம்பு:


இதற்கு விண்ணப்பிக்க 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 


ஊதிய விவரம்:


இதற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம்  வழரூ.18,000-ரூ.56,900 வழங்கப்படும். 


விண்ணப்பிப்பது எப்படி?


அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். 


தொடர்புக்கு..


செல்போன் - +91 94451 41467
இ-மெயில் : nitttrcadmin@nitttrc.edu.in


தொடர்பு எண் :044 22545436


விண்ணப்பிக்க கடைசி தேதி - 17.07.2023


இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு http://www.nitttr2023recruitment.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 


இந்த பணிக்கு விண்ணப்பிக்க http://www.nitttr2023recruitment.in/register.php - என்ற இணைப்பை பயன்படுத்தவும். 


*******


பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது.


அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC), பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.


இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தொகுப்பூதிய / ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


மதுரையில் உள்ள அலுவலகத்தில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணி விவரம்:


வழக்கு அலுவலர்கள் (Case Worker) -4 


பாதுகாப்பாளர் (Security Guard)-2


பன்முக உதவியாளார் (Multi Purposer Helper) - 1


மொத்த பணியிடங்கள் - 7


கல்வி மற்றும் பிற தகுதிகள்


வழக்கு அலுவலர்கள் பணிக்கு விண்ணபிக்க  ’Social Work’ துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


உளவியல் ஆலோசகர் (Counselling Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சியில் (Development Management) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் 1 ஆண்டு முன் அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்த பட்சம் ஓராண்டு அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும். 


அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய அனுபவம் மற்றும் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.


வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.


ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்.


பன்முக உதவியாளார் பணிக்கு விண்ணப்பிக்க ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். சமையல் தெரிந்திருக்க வேண்டும். மதுரையைச் சேர்ந்த பெண்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வயது வரம்பு:


இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:


வழக்கு அலுவலர்கள் - ரூ.15,000


பாதுகாப்பாளார் - ரூ.10,000


பன்முக உதவியாளர்- ரூ.6,400


தேர்வு செய்யப்படுவது எப்படி?


இந்த வேலைவாய்ப்பிற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிப்பது எப்படி?


இந்த பதவிகளுக்கு உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அலுவலகத்தில் நேரிடையாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். 


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:


District Social Welfare Officer,


District Social Welfare Office,


Third Floor, Additional Building of Collectorate,


Madurai-20


 தொடர்பு எண் - 0452 - 2580181


விண்ணப்பிக்க கடைசி நாள் - 21.07.2023


https://drive.google.com/file/d/1b_kAezH8IC2EVPS9vcUxdDQvQUBA5zNr/view- என்ற இணைப்பை க்ளிக் செய்து வேலைவாய்ப்பு அறிவிப்பின் முழு விவரத்தை காணலாம்.