Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?

Mega Job Fair 2024 Chennai: மாதவரத்தில்‌ அமைந்துள்ள புனித அன்னாள்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியில் ‌( St.Anne’s Arts and Science College) காலை 08.00 மணி முதல்‌ மாலை 03.00 மணி வரை நடத்தப்பட உள்ளது.

Continues below advertisement

வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையங்கள் இணைந்து 14.12.2024 அன்று தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர்‌ ரஷ்மி சித்தார்த்‌ ஐஜகடே தெரிவித்துள்ளார்‌.

Continues below advertisement

இதுகுறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது:

’’வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித்துறையின்‌ கீழ்‌ ‌ சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்‌நெறி வழிகாட்டும்‌ மையம் இயங்கி வருகிறது. இதன்‌ சார்பில் மாபெரும்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌ 14.12.2024 சனிக்கிழமை அன்று நடைபெறுகிறது.

எங்கே? எப்போது?

மாதவரத்தில்‌ அமைந்துள்ள புனித அன்னாள்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியில் ‌( St.Anne’s Arts and Science College) காலை 08.00 மணி முதல்‌ மாலை 03.00 மணி வரை நடத்தப்பட உள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில்‌ 200-க்கும்‌ மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள்‌ கலந்து கொண்டு 20,000-க்கும்‌ மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்‌.

யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?

இம்முகாமில்‌ 8ஆம்‌ வகுப்பு தேர்ச்சி முதல்‌ பிளஸ் 2 தேர்ச்சி, பட்டதாரிகள்‌, பட்டயப் படிப்பு படித்தவர்கள்‌, ஐ.டி.ஐ, தொழில்‌ கல்வி கற்றவர்கள்‌, பொறியியல்‌ பட்டம்‌, கணினி இயக்குபவர்கள்‌, தையல்‌ கற்றவர்கள்‌ என அனைத்து வித தகுதியுள்ள நபர்களும்‌ கலந்து கொள்ளலாம்‌. இம்முகாமில்‌ கலந்து கொள்ள அனுமதி இலவசம்‌.

இம்முகாமில்‌ தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டுக்‌ கழகத்தின்‌ இலவச திறன்‌ மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில்‌ மையத்தின்‌ தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள்‌, மாவட்ட முன்னோடி வங்கியின்‌ வாயிலாக வங்கி கடன்‌ வழிகாட்டுதல்கள்‌ ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது.

தனியார்‌ துறையில்‌ பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் WWW.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ பதிவு செய்து, இந்த வேலைவாய்ப்பு முகாமில்‌ கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கலந்துகொள்வது எப்படி?

தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில்‌ பணியமர்த்தப்படும்‌ நபர்களின்‌ வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண்‌ ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும்‌, இந்த முகாமில்‌ கலந்துக்கொள்ள விருப்பம்‌ உள்ள இளைஞர்கள்‌ சென்னை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தினை நேரில்‌ அணுகியோ, https://forms.gle/qsZbxrrSn547L9ep7 என்ற கூகுள் இணைப்பிலோ தங்களது விவரங்களை பதிவு செய்துகொண்டு பயன்பெறலாம்’’.

இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ரஷ்மி சித்தார்த்‌ ஜகடே கேட்டுக்கொண்டுள்ளார்‌.

Continues below advertisement
Sponsored Links by Taboola