திருவாரூர் மாவட்டத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள மக்கள் தொடர்பு அலுவலர், உதவி பதிவாளர், பிரிவு அலுவலர், தனி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற மார்ச் 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.


திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழத்தில் பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றிவருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் இல்லாத பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே  இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கானத் தகுதிகள்? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே  தெரிந்துகொள்வோம்.



மக்கள் தொடர்பு அலுவலர் (Public Relations Officer)


கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு : விண்ணப்பிப்பவர்கள் 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


உதவி பதிவாளர் (Assistant Registrar) பணிக்கானத் தகுதிகள் :


கல்வித் தகுதி : திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு: 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


பிரிவு அலுவலர் (Section Officer) பணிக்கானத் தகுதிகள்:


கல்வித் தகுதி  : இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


தனி உதவியாளர் (Personal Assistant)


கல்வித் தகுதி  : விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டு பணி அனுபவம் வேண்டும்.  இதோடு தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.


வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள்  இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://cutnnt.samarth.edu.in/index.php/site/login என்ற இணையதளப்பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:


The Joint Registrar,


 Recruitment cell,


 Central University of Tamil Nadu,


Neelakudi,


 Thiruvarur – 610 005,


Tamil Nadu


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி  தேதி – மார்ச் 29,2022


தேர்வு செய்யும் முறை:


விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://cutn.ac.in/wp-content/uploads/2022/02/NT_ADVT-NON_Teaching_18022022.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்