மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள இளைஞர்கள் உடனடியாக மார்ச் 7 ஆம் தேிக்குள் விண்ணப்பிக்கவும்.

இந்திய அரசுப்பணிக்குத் தேவையானவர்களைத் தகுந்த போட்டித்தேர்வுகளின் வாயிலாக தேர்வு செய்ய ஏற்படுத்தப்பபெற்ற அரசு சார்ந்த அமைப்பு தான் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம்( staff selection Commission). ஒரு தலைவரும், இரண்டு செயலாளர்களையும் கொண்டு இத்துறை செயல்பட்டுவருகிறது. தற்போது மத்திய அரசின் பல்வேறு துறை ரீதியான அமைச்சகங்கள், அலுவலகங்கள் மற்ம் அரசியல் சட்ட அமைப்புகள், சட்டரீதியான அமைப்புகள் , நீதிமன்றத்தில் போன்றவற்றில் எல்டிசி, இளநிலை அமைச்சக உதவியாளர், அஞ்சல் உதவியாளர், தபால் பிரிவு உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்கள் என சுமார் 5 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்றை மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பிக்கும் முறை? தேர்வு செய்யும் முறை? குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.

மத்திய அரசில் பல்வேறு பணிக்களுக்கானத் தகுதிகள்:

மொத்த காலிப்பணியிடங்கள்: 5000

பணியிடங்கள் மற்றும் சம்பள விபரங்கள்:

Lower Division clerk (LDC) Junior Secretariat assistant 

சம்பளம்:  ரூபாய் 19,900-63,200/-

Postal Assistant (PA)/ Sorting Assistant (SA)

சம்பளம்: மாதம் ரூபாய் 25,500-81,100

 Data Entry Operator (DEO)

சம்பளம்: மாதம் ரூபாய் 29,200-92,300

Data Entry Operator, Grade ‘A’

சம்பளம்: ரூபாய் 25,500-81,100 என நிர்ணயம்.

கல்வித்தகுதி:

மேற்கண்ட அனைத்துப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அறிவியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் படித்து பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சிப்பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயதுவரம்பு: 

விண்ணப்பதாரர்கள் 01.01.2022 தேதியின்படி 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட அனைத்துத் தகுதிகளும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://ssc.nic.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக வருகின்ற மார்ச் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ஆன்லைன் வாயிலாக வருகின்ற மார்ச் 8 ஆம் தேதிக்குள்  ரூ. 100 விண்ணப்பக்கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட  முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மத்திய அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை உடனடியாக பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_chsl_01022022.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளவும்.