திருச்சி: திருச்சி NIT-யில் அப்ரண்டிஸ் பணி வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி, டிப்ளமோ முடித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் அரிய வாய்ப்பு. இதை மிஸ் பண்ணிடாதீங்க.
இந்தியாவின் மிக முதன்மையான தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT Tiruchirappalli), நாட்டின் சிறந்த பொறியியல் மற்றும் தொழில்நுட்ப உயர்கல்வி மையமாக விளங்கி வருகிறது. NIRF தரவரிசையில் தொடர்ந்து முன்னணியில் இருக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிறுவனம், உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு, நவீன ஆராய்ச்சி ஆய்வகங்கள் மற்றும் சிறந்த கற்றல் சூழலைக் கொண்டு இயங்கி வருகிறது. இத்தகைய உலகத்தரம் வாய்ந்த மத்திய அரசு நிறுவனத்தில் பணிபுரிவதும், பயிற்சி பெறுவதும் தொழில்நுட்பத் துறையில் சாதிக்கத் துடிக்கும் பல இளைஞர்களின் கனவாகும்.
தற்போது, அந்தப் பெருமைமிக்க திருச்சி NIT நிறுவனத்தில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice Trainees) பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, முன்னணி தொழில் நுட்ப வல்லுநர்களின் வழிகாட்டுதலில் நேரடியாகப் பயிற்சி பெற்று, தங்கள் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள் மற்றும் கல்வித் தகுதி
இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 24 அப்ரண்டிஸ் பணியிடங்கள் தற்காலிக நியமன அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் இளநிலை பட்டப்படிப்பு (Graduate Degree), டிப்ளமோ (Diploma) அல்லது தொழிற்கல்வி படிப்பை (Vocational Course) வெற்றிகரமாக முடித்தவர்கள் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர்.
மாதாந்திர ஊக்கத்தொகை
பயிற்சிக் காலத்தில் தேர்வாகும் நபர்களுக்குத் தகுதிக்கேற்ப மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கப்படும்.
டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ. 14,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
டிகிரி படித்தவர்களுக்கு மாதம் ரூ. 15,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வோ அல்லது கடினமான நேர்முகத் தேர்வோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் தங்கள் சம்பந்தப்பட்ட பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் (Merit Marks) அடிப்படையிலேயே நேரடியாகத் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதனால் அதிக மதிப்பெண் பெற்று வேலைவாய்ப்பிற்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
முதலில் மத்திய அரசின் தேசிய அப்ரண்டிஸ் பயிற்சி இணையதமான https://nats.education.gov.in என்ற பக்கத்திற்குச் சென்று உங்களது சுயவிவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்த பிறகு, அந்த இணையதளத்தின் தேடல் பகுதியில் National Institute of Technology, Tiruchirappalli எனத் தேடி, அதில் தோன்றும் அதிகாரப்பூர்வ இணைப்பின் மூலம் உங்களது விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.09.2026
கல்வித் தகுதியும் தகுந்த ஆர்வமும் கொண்ட இளைஞர்கள் காலதாமதம் செய்யாமல் உடனடியாக மத்திய அரசின் NATS இணையதளத்தில் பதிவு செய்து, திருச்சி NIT-யில் தங்கள் தொழில்முறைப் பயணத்தைத் தொடங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அருமையான இந்த வாய்ப்பை தவற விடாமல் உங்கள் வாழ்க்கையின் அடுத்தக்கட்ட பயணத்திற்கு அஸ்திவாரமாக இதை பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெறுங்கள்.
